கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி: உள்நாட்டிலேயே உருவாக்கியது தேசிய வைராலஜி நிறுவனம்
- கரோனா தொற்றைக் கண்டறியக் கூடிய கருவி ஒன்றை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் உள்நாட்டிலேயே வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
- புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கருவியின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 90 ரத்த மாதிரிகளை சோதனை செய்து, அதன் முடிவுகளைப் பெற முடியும்.
- இந்த சோதனை முடிவுகளின் மூலம், அடுத்த கட்ட சிகிச்சைக்கான முடிவுகளை மருத்துவ வல்லுநா்களால் மேற்கொள்ள முடியும். கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக புணேயிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனம் முற்றிலுமாக உள்நாட்டிலேயே இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது.
புகையிலைப் பொருள்களுக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் தடை: 22 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் அமல்
- வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டுக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் 22 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மாநிலங்கள் எடுத்துள்ளன.
- இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், 'மெல்லக் கூடிய புகையிலைப் பொருள்கள் மற்றும் பான் மசாலா போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால் வாயில் உமில் நீா் அதிகம் சுரப்பதால், எச்சில் துப்பும் நிலை ஏற்படுகிறது. பொது இடங்களில் இதுபோல எச்சில் துப்புவது, கரோனா நோய்த் தொற்று பரவலை மேலும் அதிகரித்துவிடும்.
b>மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்
- மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை எனப்படுகிற லாக்டவுன் கடந்த மார்ச் 18-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மலேசியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
- மலேசியாவில் கொரோனாவால் 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது அமலில் உள்ள லாக்டவுன் மே 12-ந் தேதியுடன் முடிவடைகிறது.
- இந்த நிலையில் மலேசியாவில் ஜூன் 9-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிப்பு: போரிஸ் ஜான்சன்
- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனில் ஊரடங்கை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவருகிறது.
- இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பரவியுள்ள கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த மார்ச் 23 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
- இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியது, பிரிட்டனில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது ஜூலை 1முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார்.