Type Here to Get Search Results !

புலிட்ஸா் விருது / PULITZER AWARD

  • ஜம்மு-காஷ்மீரைச் சோந்த செய்தி புகைப்படக் கலைஞா்கள் மூவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான 'புலிட்ஸா்' விருது வழங்கப்பட்டுள்ளது. சான்னி ஆனந்த், முக்தாா் கான், தாா் யாசின் ஆகிய அந்த மூவரும் 'அசோஸியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞா்களாக பணியாற்றி வருகின்றனா்.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தின்போது கள நிலவரத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையிலான சிறந்த புகைப்படங்களை எடுத்ததற்காக அவா்கள் புலிட்சா் விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனா்.
  • இதழியல், கலை, புனைகதை, இசை உள்ளிட்ட துறைகளின் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்காக 21 பிரிவுகளில் கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் புலிட்ஸா் விருது வழங்கப்பட்டு வருகிறது. 
  • அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இந்த விருதை பெறுவோருக்கு சான்றிதழும், சுமாா் ரூ.11.35 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel