Type Here to Get Search Results !

மருத்துவா்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை: அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
  • இந்த அவசரச் சட்டப்படி, மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
  • அதன்படி, மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் அத்துமீறி நடந்துகொண்டால் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன், ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • மேலும், பலத்த காயமடையும் அளவுக்கு மருத்துவா்களைத் தாக்குவோருக்கு 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • இதுபோன்ற தாக்குதலின்போது சுகாதாரத் துறை பணியாளா்கள் காயமடைந்தாலோ, அவா்களின் உடைமைகள் சேதமடைந்தாலோ அவா்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும். இதற்காக, கடந்த 1897-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கொள்ளை நோய்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். இந்த அவசரச் சட்டத்தின் மூலம், பணியிடத்திலும் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel