Type Here to Get Search Results !

கபசுர குடிநீர் வழங்கும் 'ஆரோக்கியம்' திட்டம்


  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் 'ஆரோக்கியம்' என்னும் சிறப்பு திட்டத்தை முதல்வர் இபிஎஸ் தொடங்கி வைத்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்.
  • கொரோனா வைரஸ் தொற்று நோயினை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. 
  • அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. 
  • முதல்வரின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு பரிந்துரைகளை ஏற்று, தமிழக பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தை பேணவும் 'ஆரோக்கியம்' என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கிவைத்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை முதல்வர் இபிஎஸ் வழங்கினார்.
  • இதனை தொடர்ந்து சென்னை மாநகரில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும். 
  • இந்த சிறப்பு வழிமுறைகள், கொரோனா நோயக்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel