கொரோனா தடுப்பு பணிகளுக்கு 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
- கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக போலீசாருக்கு 33 நாட்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் உணவுப்படியாக 8250 ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளது அதற்காக 75.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அத்யாவசியப்பணிகளை மேற்கொண்டுவரும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மாஸ்க், கிருமிநாசினி வாங்க 1.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் நோய்த்தடுப்பு பணிகளை செய்யத்தேவையான உபகரணங்கள், ரசாயனங்கள் வாங்க 1.9 கோடியும், தற்காலிக தனிமைப்படுத்துதல் முகாம்களை அமைக்க சுகாதாரத்துறைக்கு 22.57 கோடியும், பேரிடர் மேலாண்மை குழுவிற்குத்தேவையான நோய்த்தடுப்பு பொருட்கள் வாங்க ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றும் மக்கள்
- பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட்டுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, "ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்.
- 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
கொரோனா விவகாரம் ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
- ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவதாக மத்திய அரசு உச்ச்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
- அதனால் மத்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மனுதாக்கல் செய்திருந்தது.
- இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் போலி செய்திகள் பெரும் தடையாக இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது.
- இதனை அடுத்து, அரசு வழங்கிய நெறிமுறைகளில் இருந்து விலகி, உண்மை அறியாமல் எந்த ஊடக நிறுவனமும், பத்திரிகையும் செய்தி வெளியிடவோ, அச்சிடவோ கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.