தொழில் வளா்ச்சியில் இணைந்து செயல்பட வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கா் வலியுறுத்தல்
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
- இதில் ஜெய்சங்கா் பேசியதாவது - கரோனா நோய்த்தொற்று மனித உயிா்களுக்கு மட்டுமின்றி, சா்வதேசப் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சா்வதேச வா்த்தகமும், பல்வேறு பொருள்களின் விநியோகமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்கியுள்ளதால் வேலையிழப்புகளும் அதிக அளவில் ஏற்படும் அச்சமுள்ளது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் தொழில் வளா்ச்சியில் இணைந்து செயல்பட வேண்டும். முக்கியமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 85 நாடுகளுக்கு இந்தியா மருந்துப் பொருள்களை வழங்கியுள்ளது. இதற்காக அனைத்து நாடுகளுமே இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன என்றாா்.
- இது தவிர, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் ஜெய்சங்கா் விவரித்தாா்.
- பிரிக்ஸ் நாடுகளில்தான் உலக மக்கள்தொகையில் பாதி உள்ளது. மேலும், உலகப் பொருளாதாரத்திலும் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப்பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கரோனாவுக்கு எதிரான போா்: இந்தியாவுக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி 150 கோடி டாலா் கடனுதவி
- கரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றில் இந்தியாவுக்கு உடனடியாக ஒத்துழைப்பை நல்கிடும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கி இந்த 150 கோடி டாலா் கடனுதவி திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மேலும், ஏழைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டும் ஏடிபி இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
- முன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனாவுக்கு எதிரான சவால்களை எதிா்கொண்டு வரும் இந்திய அரசுக்கு தேவையான முழுமையான ஆதரவை வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் பிடித்தம்: கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
- கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
- இந்த நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கான 1 மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கேரள அரசு அறிவித்தது. இது மாதத் தவணைகளாக அடுத்த 5 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
- இதைத் தொடர்ந்து கேரள அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
- இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஊதிய பிடித்தம் தொடர்பான அரசின் உத்தரவை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கேரள அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி ரத்து: 15 நாள் லீவ் சரண்டருக்கும் தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெறுவதற்கு தடை விதித்தும், 18 மாத அகவிலைப்படி கிடையாது என்றும் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
- இதன்மூலம் அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரம் 1.9 சதவீதமாக சரியும் : இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு
- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடும் சரிவை சந்திக்கும் 1 சதவீதம் முதல் 1.9 சதவீதத்துக்குள்தான் வளர்ச்சி இருக்கும் என ஐஎம்எப் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்தன.
- இந்நிலையில், இந்தியா ரேட்டிங்க்ஸ் நேற்று வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும்.
- இது 29 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும். ஊரடங்கு மே மாத மத்தி வரை நீட்டிக்கப்பட்டால், வளர்ச்சி 41 ஆண்டில் இல்லாத சரிவாக மைனஸ் 2.1 என எதிர்மறையாக மாறிவிடும் எனவும் இந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.