Type Here to Get Search Results !

3rd FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

திருப்பத்தூர் அருகே கற்கோடாரிகள் கண்டுபிடிப்பு
  • ராஜபாளையம் கொல்லைக் கொட்டாய் பகுதியில், 'மாரியம்மன்' என்ற பெயரில், ஏராளமான கற்கோடாரிகளை, சிறிதும், பெரிதுமாக நட்டு வைத்து வழிபடுகின்றனர்.பெரிய கற்கோடாரி, 1.2 அடிக்கும் மேலான உயரத்தோடும், சிறிய கற்கோடாரிகள், 0.5 அடிக்கும் குறைவான உயரத்தோடும் காணப்படுகின்றன. 
  • இந்த கற்கோடாரிகளை பயன்படுத்திய காலத்தை, புதிய கற்காலம் என்று அழைப்பர். அம்மலையின் அடிவார ஊரான ராஜபாளையத்தில், கற்கோடாரிகள் கிடைத்திருப்பது, 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது.
வளர்ச்சி 5.6 சதவீதம்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' கணிப்பு
  • அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 முதல், 6.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், பிட்ச் ஆய்வறிக்கை, அதிலிருந்து தன்னுடைய கணிப்பை குறைத்து அறிவித்து உள்ளது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த எங்கள் பார்வையை, பட்ஜெட் திட்டங்கள் மாற்றுவதில்லை. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 4.6 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, பற்றாக்குறை இலக்கை தவறவிட்டுள்ளது.பட்ஜெட் இலக்குகள், நிதி ஒருங்கிணைப்பை மேலும் ஒத்தி வைப்பதை குறிப்பதாக இருக்கின்றன.
  • பட்ஜெட்டில், பெயரளவிலான வளர்ச்சி, 10 சதவீதம் மற்றும் வருவாய் வளர்ச்சி, 9.2 சதவீதம் என தெரிவித்திருப்பது ஏற்கத்தகுந்தது என்றாலும், குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.



கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடராக கேரள அரசு அறிவிப்பு
  • கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 
  • அதன் பிறகு மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மூவருக்கும் அம்மாநில அரசு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
  • இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார். 
  • மேலும், அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களிடமும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
  • கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை தாண்டி உலகின் பல நாடுகளிலும் பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 7வது தேசிய சைக்கிள் பந்தயம்: சீறிப் பாய்ந்த சைக்கிள்கள்
  • கோவையில் தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம் பினாக்கிள் விளையாட்டு மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து, செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது.
  • 7வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியானது, தொழில்ரீதியாக பந்தய வீரர்கள், சாதாரண ஆண்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என பல்வேறு பிரிவுகளில் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel