திருப்பத்தூர் அருகே கற்கோடாரிகள் கண்டுபிடிப்பு
- ராஜபாளையம் கொல்லைக் கொட்டாய் பகுதியில், 'மாரியம்மன்' என்ற பெயரில், ஏராளமான கற்கோடாரிகளை, சிறிதும், பெரிதுமாக நட்டு வைத்து வழிபடுகின்றனர்.பெரிய கற்கோடாரி, 1.2 அடிக்கும் மேலான உயரத்தோடும், சிறிய கற்கோடாரிகள், 0.5 அடிக்கும் குறைவான உயரத்தோடும் காணப்படுகின்றன.
- இந்த கற்கோடாரிகளை பயன்படுத்திய காலத்தை, புதிய கற்காலம் என்று அழைப்பர். அம்மலையின் அடிவார ஊரான ராஜபாளையத்தில், கற்கோடாரிகள் கிடைத்திருப்பது, 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது.
வளர்ச்சி 5.6 சதவீதம்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்' கணிப்பு
- அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 முதல், 6.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், பிட்ச் ஆய்வறிக்கை, அதிலிருந்து தன்னுடைய கணிப்பை குறைத்து அறிவித்து உள்ளது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த எங்கள் பார்வையை, பட்ஜெட் திட்டங்கள் மாற்றுவதில்லை. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 4.6 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, பற்றாக்குறை இலக்கை தவறவிட்டுள்ளது.பட்ஜெட் இலக்குகள், நிதி ஒருங்கிணைப்பை மேலும் ஒத்தி வைப்பதை குறிப்பதாக இருக்கின்றன.
- பட்ஜெட்டில், பெயரளவிலான வளர்ச்சி, 10 சதவீதம் மற்றும் வருவாய் வளர்ச்சி, 9.2 சதவீதம் என தெரிவித்திருப்பது ஏற்கத்தகுந்தது என்றாலும், குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடராக கேரள அரசு அறிவிப்பு
- கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
- அதன் பிறகு மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மூவருக்கும் அம்மாநில அரசு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
- இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.
- மேலும், அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களிடமும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
- கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை தாண்டி உலகின் பல நாடுகளிலும் பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 7வது தேசிய சைக்கிள் பந்தயம்: சீறிப் பாய்ந்த சைக்கிள்கள்
- கோவையில் தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம் பினாக்கிள் விளையாட்டு மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து, செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது.
- 7வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியானது, தொழில்ரீதியாக பந்தய வீரர்கள், சாதாரண ஆண்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என பல்வேறு பிரிவுகளில் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.