- ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் சிறார் ஆரோக்கிய வல்லுனர்கள் குழு 180 நாடுகளில் சிறார் நிலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
- ஸ்திரக் குறியீட்டிற்கு 2030ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக கரியமில வாயு வெளியிடும் நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நாடுகளில் தனி நபரின் சராசரி கரியமில வாயு வெளியீட்டால் சிறார் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டது.
- அதில் ஸ்திரமான நிலைப்பாடு உள்ள நாடுகளில் இந்தியா 77வது இடத்தை பிடித்துள்ளது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வாழ்நாள், சிறார் ஆரோக்கிய சேவைகள், கல்வி, அடிப்படை சுகாதாரம், வறுமையற்ற சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறார் உயிர் பிழைத்து வளரக் கூடிய நாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
- அதன்படி சிறார் நலன் மற்றும் உயிர்வாழ்வு அடிப்படையிலான குறியீட்டில் இந்தியா 131வது இடத்தை பிடித்துள்ளது.உலகளவில் சிறார் நலன் மற்றும் உயிர்வாழ்வு அடிப்படையிலான குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
- அடுத்த இரு இடங்களில் தென்கொரியா, நெதர்லாந்து நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இறுதி இடத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு, சாட் மற்றும் சோமாலியா நாடுகள் உள்ளன.
- தனிநபர் கரியமில வாயு வெளியீடு அடிப்படையிலான ஸ்திரத்தன்மை குறியீட்டில் நார்வே 156வது இடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்து, கொரியா ஆகியவை முறையே 160 மற்றும் 166வது இடத்தை பிடித்துள்ளன.
- அதிக கரியமில வாயு வெளியிடும் முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா இடம் பெற்று உள்ளன. குறைந்த கரியமில வாயு வெளியிடும் நாடுகளில் புருண்டி, சாட், சோமாலியா முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் ஸ்திரக் குறியீடு 2020 / UN World Health Organization's Establishment Code 2020
February 21, 2020
0
Tags