கடற்படைக்கு நவீன போர் கப்பல்
- ராணுவ பொதுத் துறை நிறுவனமான, கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்துள்ள, அதி நவீன வசதிகள் கொண்ட, நீர்மூழ்கி கப்பலால் தகர்க்க முடியாத, கண்டுபிடிக்க முடியாத போர்க் கப்பல், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் தயாரித்து, ஒப்படைத்துள்ள நான்காவது போர்க் கப்பலான இதற்கு, 'கவரட்டி' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
பாதுகாப்புத் துறை நிறுவனத்திற்கு மனோகர் பரிக்கரின் பெயர்
- மறைந்த முன்னாள் கோவா முதல்வரின் பெயரை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனலைசிஸ் என்றழைக்கப்படும்.
- இதன்படி அந்நிறுவனம் மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனலைசிஸ் என்று அழைக்கப்படும்.
பாக். ராணுவம் புதிய ஏவுகணை சோதனை
- பாக். ராணுவம் தயாரித்தராத் ௨, ஏவுகணை நேற்று பரிசோதிக்கப்பட்டது. கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் இந்த ஏவுகணை ௬௦௦ கி.மீ. வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும்.
- இதுகுறித்து பாக். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'ராத்- ௨ ஏவுகணை அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் செலுத்துல் அமைப்புகளைக் கொண்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி மீண்டும் தேர்வு
- ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபராக அஷ்ரப் கானி 70 இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அண்டை நாடான ஆப்கனில் கடந்தாண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது.
- இதில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை அடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
- இந்நிலையில் ஐந்து மாத தாமதத்துக்குப் பின் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்கன் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அஷ்ரப் கானி 54 சதவீத ஓட்டுகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு 5 வெள்ளி, 6 வெண்கலம்
- ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது.
- இப்போட்டியில் இந்தியா ஐந்து வெள்ளி மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களைப் பெற்றது. 45 கிலோ எடை பிரிவில், கேவிஎல் பவானி குமாரி இளைஞர் பெண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
- சித்தாந்தா கோகோய் சிறுவர்கள் மற்றும் ஜூனியர் ஆண்கள் போட்டிகளில் 61 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார்.
- பின்னர், 49 கிலோ பிரிவில் முகுந்த் அஹெர் இளைஞர் சிறுவர் பிரிவில் ஒரு வெள்ளி வென்றார். 45 கிலோ பிரிவில் ஹர்ஷாதா கவுட் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
- வெண்கலப் பதக்கங்களை வென்றவர் பட்டியலில் 55 கிலோ பிரிவில் போனி மங்க்க்யா, 59 கிலோ பிரிவில் நிர்மலா தேவி, 49 கிலோ பிரிவில் எஸ்.குருனைடு மற்றும் 55 கிலோவில் கோலம் டிங்கு ஆகியோர் உள்ளனர்.
ஆசிய மல்யுத்தம்: சுனில் 'தங்கம்'
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 87 கி.கி., பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்றார்.ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் டில்லியில் நடக்கிறது. இதன் 87 கி.கி., பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் பங்கேற்றார்.
- இவர் காலிறுதியில் 8-2 என ஜப்பானின் தாகாஹிரோவை வீழ்த்தினார். அரையிறுதியில் சுனில் 12-8 என கஜகஸ்தானின் அஸ்மத்தை தோற்கடித்தார். பைனலில் கிர்கிஸ்தானின் ஆசாத்தை எதிர் கொண்டார்.
- அபாரமாக விளையாடிய சுனில் 5-0 என வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச்சென்றார்.அர்ஜுன் வெண்கலம்55 கி.கி., பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் அர்ஜுன் 10-2 என சவுதியின் டுரோகி அலியை வீழ்த்தினார்.
- பின், அரையிறுதியில் ஈரானின் முகமதுவிடம் 7-8 என போராடி தோல்வியடைந்தார். வெண்கலத்திற்கான போட்டியில் அர்ஜுன் 7-4 என கொரியாவின் டாங்யிக்கை வீழ்த்தினார்.
- இந்தியாவின் சச்சின் ராணா (63 கி.கி.,) தகுதிச்சுற்றுப்போட்டியில், கஜகஸ்தானின் டியானரை 6-0 என வீழ்த்தினார். பின், நடந்த காலிறுதியில், உஸ்பெகிஸ்தானின் எல்முராத்திடம் 0-8 என தோல்வியடைந்தார்.
- இந்திய வீரர் மேகர் சிங் (130 கி.கி.,) காலிறுதியில் 4-0 என உஸ்பெகிஸ்தானின் டேலரை தோற்கடித்தார். இவர் அரையிறுதியில் 9-1 என கொரியாவின் மின்சியோக்கிடம் வீழ்ந்தார். பின், நடந்த வெண்கலத்திற்கான போட்டியில் மேகர் 2-3 என கிர்கிஸ்தானின் ரோமனிடம் தோல்வியடைந்தார்.