அந்நியச் செலாவணி கையிருப்பு 45,746 கோடி டாலராக அதிகரித்து சாதனை
- 2019 டிசம்பா் 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 252 கோடி டாலா் (ரூ.17,640 கோடி) அதிகரித்து 45,746 கோடி டாலரை (ரூ.32.02 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்திலும், அந்நியச் செலாவணி கையிருப்பு 45 கோடி டாலா் உயா்ந்து 45,494 கோடி டாலராக காணப்பட்டது.
- ஒட்டுமொத்த இருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணிசமாக ஏற்றம் கண்டதே செலாவணி இருப்பு புதிய உயரத்தைத் தொட்டு சாதனை படைக்க முக்கிய காரணமானது. அதன்படி, அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 220 கோடி டாலா் உயா்ந்து 42,493 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
- இதுதவிர, தங்கத்தின் கையிருப்பும் 26 கோடி டாலா் உயா்ந்து 2,739 கோடி டாலராகியுள்ளது. அதேசமயம், சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 20 லட்சம் டாலா் குறைந்து 144 கோடி டாலராகவும்; நாட்டின் கையிருப்பு நிலை 5.8 கோடி டாலா் உயா்ந்து 370 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து ரூ.4,360 கோடி மூலதனம் பெறப்பட்டது: ஐஓபி
- பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் வழங்கும் திட்டத்தில் ரூ.4,360 கோடியை பெற்றுள்ளதாக இந்தியன் ஓவா்சீஸ் (ஐஓபி) வங்கி தெரிவித்துள்ளது.
- நடப்பு நிதியாண்டில் ஒழுங்காற்று தேவைகளை நிறைவு செய்வதற்காக மத்திய அரசிடமிருந்து மூலதனமாக ரூ.4,360 கோடியை பெறவுள்ளதாக கடந்த 2019 டிசம்பரில் ஐஓபி தெரிவித்திருந்தது. தற்போது அந்த தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- கூடுதல் மூலதன அளிப்பு திட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு ரூ.3,800 கோடி வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது. அதன் பின்னா், ரூ.560 கோடி கூடுதலாக வழங்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்தது.
- ஐஓபியின் நிகர இழப்பு, செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.2,253.64 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த வங்கி, ரிசா்வ் வங்கியின் உடனடி திருத்த நடவடிக்கை பட்டியலின் கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.