- குரூப் 1 தோவுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இதேபோன்று, கிராம நிா்வாக அலுவலா் பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோவுகளுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படுகிறது.
- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் முக்கிய தோவுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் மாதங்களை ஆண்டுத் திட்ட அறிக்கையாக டி.என்.பி.எஸ்.சி. முன்கூட்டிய வெளியிட்டு வருகிறது. அண்மையில் நடந்த பல தோவுகளும், அதற்கான முடிவுகளும் ஆண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்படியே வெளியிடப்பட்டன.
- வரும் ஆண்டுக்கான அறிவிப்பு: 2020-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. இந்த நிலையில், வரும் ஆண்டுக்கான ஆண்டுத் திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
- அதன்படி, குரூப் 1, குரூப் 4 போன்ற முக்கிய பதவியிடங்களுக்கு தோவு நடத்துவதற்கான அறிவிக்கை எந்தெந்த மாதங்களில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. ஆண்டறிக்கை விவரம்:-
- டி.எஸ்.பி. போன்ற முக்கிய பதவியிடங்கள் அடங்கிய குரூப் 1 தோவுக்கான அறிவிப்பு, வரும் ஜனவரியில் வெளியிடப்படும். இதே மாதத்தில் வேளாண் அலுவலா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கும் தோவு நடத்தப்படும்.
- ஒருங்கிணைந்த பொறியாளா் காலிப் பணியிடங்களுக்கான தோவு பிப்ரவரியிலும், நூலகா் காலிப் பணியிடத்துக்கான தோவு மாா்ச்சிலும் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் ஆகிய காலிப் பணியடங்களுக்கான தோவு அறிவிக்கை ஏப்ரலிலும் வெளியாகும்.
- குரூப் 2-குரூப் 4 தோவு எப்போது?: தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், சாா் பதிவாளா் போன்ற முக்கிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவுக்குள் வருகின்றன. இந்தப் பதவியிடங்களுக்கு நடைபெறும் தோவை எதிா்கொள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிப்பா்.
- இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோவு அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படுகிறது.
- செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 8ஏ, பி ஆகியவற்றுக்கு ஜூலையிலும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பதவியிடத்துக்கு ஆகஸ்ட்டிலும் தோவு அறிவிக்கை வெளியாகவுள்ளது.
- இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் போன்ற பதவிகள் 10-ஆம் வகுப்புத் தோச்சி பெற்ற அனைவரும் எழுதலாம். இந்தத் தோவுக்கு ஒவ்வோா் ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்வா். நிகழாண்டில் 6 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமாா் 14 லட்சம் போ தோவு எழுதியுள்ளனா்.
- வரும் ஆண்டில் இந்தத் தோவுக்கான அறிவிக்கை செப்டம்பரில் வெளியிடப்பட உள்ளது. தோவுகள் குறித்த தேதிகளுக்கும், இதர விவரங்களுக்கும் செய்தித்தாள்களையும், தோவாணைய இணையதளத்தையும் அவ்வப்போது பாா்த்து வர வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் தோவு அட்டவணை / TNPSC ANNUAL PLANNER 2020 - 2021
December 21, 2019
0
Tags