- சாகித்ய அகாதெமி 23 மொழிகளுக்கான விருதை புதன்கிழமை அறிவித்தது. இதில், ஏழு கவிதைப் புத்தகங்கள், நான்கு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அபுனைவு, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்கு தலா ஒரு புத்தகங்களுக்கு விருது கிடைத்துள்ளது.
- விருது பெற்றவா்களுக்கு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தில்லியில் 2020, பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
- 23 மொழிகளைச் சோந்த சாகித்ய அகாதெமியின் நடுவா் குழு விருதுக்கானவா்களைத் தோந்தெடுத்தது
- இந்த ஆண்டுக்கான விருது தமிழில், எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி பகுதியைச் சார்ந்தவர். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார்.
- ஏற்கனவே 'கூகை' என்ற நாவலுக்காகத் தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார்.
- அசாமிய மொழி ஜோயஸ்ரீ கோஸ்வாமி மகந்தா
- வங்க மொழி சின்மோய் குகா
- போடோ புகான் பாசுமதரி
- டோக்ரி ஓம் சர்மா ஜந்தாரி
- ஆங்கிலம் சசி தரூர்
- குஜராத்தி ரதிலால் பொன்சாகர்
- இந்தி நந்த் கிஷோர் ஆசார்யா
- கன்னடம் விஜயா
- காஷ்மீரி அப்துல் அகத் ஹஜினி
- கொங்கணி நிபா ஏ காண்டேகர்
- மைதிலி குமார் மனிஷ் அரவிந்த்
- மலையாளம் மதுசூதன்நாயர்
- மணிப்புரி பிர்மங்கோல் சிங்
- மராத்தி அனுராதா பாடில்
- ஒரியா தருன் காந்தி மிஷ்ரா
- பஞ்சாபி கிர்பால் கஸக்
- ராஜஸ்தானி ராம்ஸ்வரூப் கிசான்
- சமஸ்கிருதம் பென்னா மதுசூதன்
- சந்தாலி காளிச்ரண் ஹெம்பரம்
- சிந்தி ஈஸ்வ்ர் மூர்ஜானி
- தமிழ் சோ தர்மன்
- தெலுங்கு பண்டி நாராயணசாமி
- உருது ஷஃபி குத்வாய்
சாகித்திய அகாதெமி விருது / Sahitya Akademi 2019 - 2020
December 19, 2019
0
Tags