தமிழகத்தில் 7,642 உடல் உறுப்புகள் தானம்
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
- அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. அதனால்தான், தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.
- தமிழகத்தில் இதுவரை 1308 கொடையாளா்களிடம் இருந்து 7, 642 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,351 சிறுநீரகங்களும், 1,974 கருவிழிப் படலங்களும், 1,297 கல்லீரல்களும், 823 இதய வால்வுகளும், 573 இதயங்களும், 474 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
- அதில் பெரும்பாலானாவை பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோா் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
- உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியாா் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தமிழக வீரர் தனுஷ் சாதனை
- நேபாள தலைநகர் காத்மண்டுவில் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
- இதில், நீச்சல் பிரிவில் கலந்து கொண்ட, தமிழக வீரர் தனுஷ், 200மீ மற்றும் 100மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்று, 2 வெள்ளி பதக்கங்களை வென்றார்.
முத்தரப்பு பெண்கள் ஹாக்கியில் கோப்பை வென்றது இளம் இந்தியா
- ஆஸ்திரேலியா சென்ற இந்தியா, நியூசிலாந்து ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணிகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஆஸ்திரேலியாவின் அபிகைல் வில்சன் முதல் கோலடித்தார்.
- இந்தியாவுக்கு 22, 26வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. முதல் பாதி முடிவில் இந்தியா 0-1 என, பின்தங்கி இருந்தது.இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 53வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோலடித்த ககன்தீப் கவுர் 1-1 என, சமநிலை பெறச் செய்தார்.
- ஆனால் இது நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் அபிகைல் வில்சன் 'பெனால்டி கார்னர்' மூலம் மீண்டும் ஒரு கோலடித்தார்.
- தொடர்ந்து போராடிய இந்திய வீராங்கனைகளால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது.
- இந்தியா முதலிடம்: லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 7 புள்ளிகளுடன் (4 போட்டி, 2 வெற்றி, 1 'டிரா', 1 தோல்வி) சமநிலையில் இருந்தன. கோல் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை (-1) முந்திய இந்திய அணி (+4) புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பை வென்றது.