- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
- அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. அதனால்தான், தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.
- தமிழகத்தில் இதுவரை 1308 கொடையாளா்களிடம் இருந்து 7, 642 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,351 சிறுநீரகங்களும், 1,974 கருவிழிப் படலங்களும், 1,297 கல்லீரல்களும், 823 இதய வால்வுகளும், 573 இதயங்களும், 474 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
- அதில் பெரும்பாலானாவை பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோா் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
- உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியாா் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் 7,642 உடல் உறுப்புகள் தானம் / TAMIL NADU DONATE 7642 BODY ORGANS
December 09, 2019
0
Tags