- சர்வதேச அளவில் இன்று, 'உலக உணவு தினம்' கொண்டாடப்பட்டுவருகிறது. அனைவருக்கும் தேவை உணவு, ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் உலக உணவு தினத்தன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- இந்த ஆண்டு, பட்டினி இல்லாத உலகம் #ZeroHungerWorld என்ற ஹேஷ்டேக்குடன்கூடிய செய்தி பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.
- இதில், உலகமயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக உணவுப் பழக்க வழக்கங்கள் பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. ஆரோக்கியமான உணவு உட்கொள்வது குறைந்துகொண்டே வர, இன்ஸ்டன்ட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
- ஒருபுறம் உணவுப் பழக்கங்கள் மாறினாலும், மறுபுறம் பல லட்சம் மக்கள் ஒருவேளை உணவின்றித் தவித்துவருவது கவலையான நிதர்சனம்.
- ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி மையம் சார்பில், 'உலகப் பட்டினி குறியீட்டு தரவரிசை' வெளியிடப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது.
- கணக்கெடுக்கப்பட்ட நாடுகளிலி ருந்து, குறைந்த பாதிப்புடைய நாடுகள் முதல் அதிக பாதிப்புடைய நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டன.
- இதில், அதிக பாதிப்புள்ள கடைசி 20 நாடுகளுக்குள் இருக்கும் இந்தியாவில், அதிக மக்கள் பசியால் வாடுவதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கிடுவோம்' என்ற விழிப்புணர்வு அழைப்பு மட்டுமல்லாது, 'அனைவருக்கும் உணவு' என்ற நிலை உருவாக வேண்டும் என்பதை ஐநா வலியுறுத்துகிறது.
- "நம்முடைய செயல் ஒவ்வொன்றும் எதிர்கால நன்மைக்கானது. பட்டினி இல்லாத உலகை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
World Food Day / உலக உணவு தினம்
October 17, 2019
0
Tags