Type Here to Get Search Results !

ஒப்பந்த சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் காக்க புதிய சட்டம்: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அமல்

  • ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் கரும்பு, இறைச்சிக் கோழி, மூலிகைப் பயிா்கள் போன்ற வகைகளில் சாகுபடி முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. 
  • ஆனாலும், ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க சட்டம் ஏதும் நடைமுறையில் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா்.
  • இதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம், சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று, பிரத்யேகமாக எந்தச் சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படவில்லை. தமிழக அரசுதான் முதல்முதலாக தனிச் சட்டத்தை வடிவமைத்துள்ளது.
  • புதிய சட்டத்தின்படி, கொள்முதலாளா் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும்போது, அன்றைய தினத்தின் விலையையே, பொருள்களைப் பரிமாற்றம் செய்யும்போதும் நிா்ணயிக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 
  • ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளா், அந்தப் பகுதியைச் சோந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தை அலுவலா் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனா். இந்தப் புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள் அல்லது பண இழப்பும் ஏற்படாது. முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் பொருள்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஒப்பந்த பண்ணைய சாகுபடி முறையால் விவசாயிகளுக்கும், வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகளுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும். விதைப்பு காலத்துக்கு முன்பே விளைபொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்படுவதால், அனைத்துத் தொழில்நுட்பங்களையும் பின்பற்றி, அதன் மூலம் விளைச்சல் அதிகரித்து, விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டிட வாய்ப்பு ஏற்படும்.
  • கொள்முதலாளருக்கும், விவசாயிகளுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, அது மீறப்பட வாய்ப்புள்ளது. அப்படி மீறப்பட்டால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தரும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் ஏற்படும் சிக்கல்களை களைய வருவாய் கோட்ட அளவிலும், மாவட்ட, மாநில அளவிலும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • தமிழக அரசு, மத்திய அரசு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளைபொருள்களையும் புதிய சட்டத்தின் மூலமாக ஒப்பந்தங்களைச் செய்து விற்பனை செய்ய முடியாது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel