- இயற்பியலுக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
- ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2019ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- அண்டம் பற்றிய ஆய்வுக்காக, ஜேம்ஸ் பீபிளிஸ்க்கும், சூர்ய குடும்பத்தை போல மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக மேயர், கியூலோஸ் ஆகியோருக்கு, நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ஜேம்ஸ் பீபிள்ஸ், வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்தவர்.
- மற்ற இருவரும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். பீபிள்ஸ், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றுகிறார், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலையில், மைக்கேல் மேயர், கியூலோஸ் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். பரிசுத் தொகையான, 6.58 கோடி ரூபாயில் பாதியை, பீபிள்சுக்கும், அடுத்த பாதியை, மேயர் மற்றும் கியூலோசுக்கு பகிர்ந்து வழங்கவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR PHYSICS 2019)
October 09, 2019
0
Tags