- உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அணுக்கள் செயல்படுவது குறித்து கண்டுபிடித்த, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, மூன்று விஞ்ஞானிகள், மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு நேற்று துவங்கியது.
- முதலில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் கெலின், கிரெக் சிமென்சா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ராட்கிலிப், மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இவர்களுக்கு, 6.5 கோடி ரூபாய் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. வரும், டிசம்பர், 10ல் நோபலின் நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
- 'உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை உணர்ந்துக் கொண்டு அதற்கு ஏற்ப அணுக்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ததற்காக, இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம், அனீமியா, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது' என, தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
- வில்லியம் கெலின், அமெரிக்காவின் ஹாவர்டு ஹூக்ஸ் மருத்துவ மையத்தில் ஆராய்ச்சி யாளராக உள்ளார்.
- கிரெக் சிமன்சா, ஜான் ஹாப்கின்ஸ் செல் பொறியியல் மையத்தின் தசை ஆராய்ச்சி திட்ட இயக்குனராக உள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ராட்கிலிப், லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் மையத்தின் இயக்குனராக உள்ளார்.
2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR MEDICINE 2019)
October 08, 2019
0
Tags