- வேதியியல் துறையில், 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு, மூவருக்கு நேற்றுஅறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில், உயரிய விருதான நோபல் பரிசு, ஆல்பிரட் நோபலின் நினைவாக, ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
- நோபல் பரிசுடன், 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
- அமெரிக்காவை சேர்ந்த, ஜான் குடெனாப், ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானை சேர்ந்த, அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு, பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
- மேம்படுத்தப்பட்ட, 'லித்தியம் அயன் பேட்டரிகள்' ஆய்வில் புதிய சாதனைகள் படைத்ததற்காக, அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- அதிக எடை இல்லாத, சிறிய வடிவிலான, 'லித்தியம் அயன்' பேட்டரிகள், 'மொபைல் போன்கள்' முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. நோபல் பரிசு பெற்றுள்ள, அமெரிக்காவை சேர்ந்த, ஜான் குடெனாப், 97 வயதில் இந்த பரிசை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2019
October 10, 2019
0
Tags