சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு: செப்.27-இல் சென்னையில் தொடக்கம்
- சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு சென்னையில் வரும் 27, 28 தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
வரலாற்றில் இது முதல்முறை 9 வீராங்கனைகளைப் பரிந்துரைத்த விளையாட்டுத்துறை
- வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய பட்டியலை பத்ம விருதுகளுக்காக உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது இந்திய விளையாட்டுத்துறை.
- பட்டியலில், பத்ம விபூஷண் விருதுக்காக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதன்முறை. இவர் தவிர பாட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து பத்மபூஷண் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- 2017-ல் பத்ம விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இறுதிச் சுற்றில் இவர் பெயர் தேர்வாகவில்லை. கடந்த முறை வாய்ப்பு நழுவிய நிலையில், இந்த முறை இவரது பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்த இருவருடன் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட், பெண்கள் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மனிகா பத்ரா, துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் சுமா ஷிரூர் மற்றும் மலையேற்ற இரட்டையர்கள் டஷி மற்றும் நுங்ஷி மாலிக் ஆகியோரின் பெயர்களும் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் பென்சன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
- 60 வயதான விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் பென்சன் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிப்பு
- டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. ஷாங்காய் கூட்டமைப்பின் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தை டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது