அம்மா தகவல் மையம்
அம்மா சேவை மையம்
- இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- கட்டணமில்லா தொலைபேசி எண் – 1100.
- இது ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும்.
- இத்திட்டம் தொடக்க நிலையில் ஒரு நாளைக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும்.
- இது குடிமக்கள் அரசாங்கத் துறைகள் குறித்த புகார்களை அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- குடிமக்களிடமிருந்துப் பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
- புகார் அளித்த குடிமக்களுக்குப் புகார் குறித்துத் தகவல் அளிக்கப்பட வேண்டிய அதிகாரி பற்றியும் புகார் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைப் பற்றியும் தெரிவிக்கப்படும்.
- முதல்வர் குறைதீர் பிரிவில் குடிமக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ அளிக்கலாம். எனவே அம்மா தகவல் மையம் முதல்வர் குறைதீர் பிரிவின் நீட்டிப்பு என்று கருதப்படுகிறது.
அம்மா சேவை மையம்
- இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று அறிவிக்கப்பட்டது.
- இது அம்மா மக்கள் சேவை மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
- நகர்ப்புற மக்களுக்காக மாநகராட்சிகள் ஒவ்வொரு புதன் கிழமையும் இந்த மையங்களைச் செயல்படுத்தும்.
- பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், குடும்ப அட்டைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், கட்டிடத்திற்கான அனுமதிப் பத்திரம் போன்ற பல்வேறு பொதுச் சேவைகளை வழங்குவதற்கு இது வசதியளிக்கிறது.
- இந்த சேவை மையங்களின் நோக்கம் அதிகாரிகளின் பயணங்களின் போது அவர்களை சந்திக்க முடியாமல் உள்ள மக்களுக்கு உதவுவதும் சேவை வழங்குதலில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதும் ஆகும்.