Type Here to Get Search Results !

அம்மா சேவை மையம்

அம்மா தகவல் மையம்
  • இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • கட்டணமில்லா தொலைபேசி எண் – 1100. 
  • இது ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும். 
  • இத்திட்டம் தொடக்க நிலையில் ஒரு நாளைக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும். 
  • இது குடிமக்கள் அரசாங்கத் துறைகள் குறித்த புகார்களை அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • குடிமக்களிடமிருந்துப் பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். 
  • புகார் அளித்த குடிமக்களுக்குப் புகார் குறித்துத் தகவல் அளிக்கப்பட வேண்டிய அதிகாரி பற்றியும் புகார் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைப் பற்றியும் தெரிவிக்கப்படும். 
  • முதல்வர் குறைதீர் பிரிவில் குடிமக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ அளிக்கலாம். எனவே அம்மா தகவல் மையம் முதல்வர் குறைதீர் பிரிவின் நீட்டிப்பு என்று கருதப்படுகிறது. 



அம்மா சேவை மையம்
  • இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று அறிவிக்கப்பட்டது. 
  • இது அம்மா மக்கள் சேவை மையம் என்றும் அழைக்கப்படுகிறது. 
  • நகர்ப்புற மக்களுக்காக மாநகராட்சிகள் ஒவ்வொரு புதன் கிழமையும் இந்த மையங்களைச் செயல்படுத்தும். 
  • பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், குடும்ப அட்டைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், கட்டிடத்திற்கான அனுமதிப் பத்திரம் போன்ற பல்வேறு பொதுச் சேவைகளை வழங்குவதற்கு இது வசதியளிக்கிறது. 
  • இந்த சேவை மையங்களின் நோக்கம் அதிகாரிகளின் பயணங்களின் போது அவர்களை சந்திக்க முடியாமல் உள்ள மக்களுக்கு உதவுவதும் சேவை வழங்குதலில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதும் ஆகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel