Type Here to Get Search Results !

அம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்

அம்மா விதைகள் திட்டம்
  • அம்மா விதைகள் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 02 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • தமிழக மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட விதைளைப் பயன்படுத்துவதை இது ஊக்கப்படுத்துகிறது. 
  • நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளின் மேல் தளங்களில் (மாடியில்) காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதை இது ஊக்கப்படுத்த விருக்கிறது. 
  • இந்த விதைகள் நியாயமான விலையில் அம்மா சேவை மையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 
  • இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு விதைகள் வளர்ச்சி கழகம் பொறுப்பு நிறுவனமாக செயல்படும். 
  • திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள குடிமக்கள் தங்களின் மாடிகளில் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 



அம்மா மருந்தகம்
  • இது 2014 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • இந்த மருந்தகங்கள் மரபியல்பான மற்றும் நிறுவன அடையாளம் கொண்ட அனைத்து வகை மருந்துகளையும் குறைவான விலையில் விற்பனை செய்கின்றன. 
  • இந்த மருந்தகங்கள் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்கின்றன. 
  • இந்த திட்டத்தின் மூலம் தினக்கூலித் தொழிலாளர்கள் பெரியளவில் பயனடைகிறார்கள். 
  • இந்த மருந்தகங்கள் சென்னை, ஈரோடு, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel