Type Here to Get Search Results !

2nd APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு நீதிபதி தேவதாஸ் நியமனம்
  • தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், கே.ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம், மூத்த வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி கொள்கை: ரிசர்வ் வங்கியின் 3 நாள் கூட்டம் தொடங்கியது
  • இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த 3 நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் தொடங்கியது.
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதி கொள்கை குழுவில் (எம்பிசி) அங்கம் வகிக்கும் ஆறு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். 
இந்தியாவிலேயே வேலை இல்லா திண்டாட்டம் குறைவான மாநிலம் கர்நாடகா
  • கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில்,கர்நாடக மாநிலத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 292 பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
  • இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, கர்நாடகா மாநிலத்தின் வேலை இல்லா திண்டாட்டம் 1.2 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
  • அதேசமயம் திரிபுரா தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக இருக்கிறது. இங்கு 22.9 சதவீதம் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது.
  • வேலைவாய்ப்பு முகாம், பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம் ஆகியவை அம்மாநில மக்கள் பெருமளவு வேலை வாய்ப்பை பெற காரணமாக அமைந்துவிட்டது.



ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடந்த சிறு நாடு எஸ்டோனியா
  • ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறு நாடான எஸ்டோனியாவில் வாக்குப் பதிவு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது
  • உலகநாடுகளில் இணைய தள பயன்பாடு பெரிதும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இணையம் மூலம் அரசு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
  • ஐரோப்பாவில் உள்ள ஒரு மிகச்சிறிய நாடு எஸ்டோனியா. இந்த நாட்டின் பெயரையும் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். செய்தித் தாளில் இடம்பெறாத நாடுகளில் ஒன்றாக இருந்த இந்நாடு இப்போது உலகப் புகழ் அடைந்துள்ளது.
  • இதற்கு முக்கிய காரணம்சமீபத்தில் நடந்த இந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் ஆகும்.இந்த தேர்தலில் 44% வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாகி உள்ளன. இதில் வெற்றி பெற்ற கட்சி ஆன்லைனில் 40% வாக்குகள் பெற்றது. இது அந்நாட்டில் பதிவான மொத்த வாக்குகளில் 30% ஆகும்.
  • அனைத்து வயதினருக்கும் ஆன்லைன் மூலம் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் வாக்களித்தவர்களில் 25% பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். அத்துடன் ஆன்லைனில் 20% வாக்குகள் 45 முதல் 54 வயதான வாக்காளார்கள் வாக்களித்துள்ளனர். 
புதுச்சேரி தொலைக் காட்சி நிலைய இயக்குனருக்கு தமிழ் சங்க விருது
  • புதுச்சேரி தமிழ் சங்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் புதுச்சேரி தொலைக் காட்சி நிலைய இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு தமிழ் சங்க விருது வழங்கப்பட்டது.
கடன்பத்திரங்களை வெளியிட்டு எல் & டி பைனான்ஸ் ரூ.1,000 கோடி திரட்டுகிறது
  • கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி நிதி திரட்டப்படவுள்ளது. 3,5, மற்றும் 8 ஆண்டுகளில் முதிர்வடையும் வகையில் இந்த கடன்பத்திரங்கள் வெளியிடப்படும். இதற்கான வட்டி விகிதம் 8.48-9.05 சதவீதமாக இருக்கும்.
  • இதில், திரட்டப்படும் தொகை கடன், நிதியளித்தல், தற்போது நிறுவனத்தின் கடன் மறுநிதியளித்தல் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும். 
  • ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கவுள்ள இக்கடன்பத்திர வெளியீடு 18-ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும், இவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எல் & டி பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
  • எடல் வைஸ், ஏகே கேப்பிட்டல், ஆக்ஸிஸ் கேப்பிட்டல் மற்றும் டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அட்வைஸர் ஆகியவை இக்கடன்பத்திர வெளியீட்டை நிர்வகிக்க உள்ளன. 
  • கடந்த மாதம் இந்நிறுவனம் முதல் கட்ட கடன்பத்திர வெளியீட்டை மேற்கொண்டு ரூ.1,500 கோடி திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், வரவேற்பு அதிகரித்ததையடுத்து, ரூ.2,228.06 கோடியை திரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel