இந்த திட்டம் 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் கடலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிக்கோள்கள்
பாலின சமத்துவம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு சமூக மேம்பாட்டை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயனாளிகள்
கைவிடப்பட்ட மற்றும் சரணடைந்த பெண் குழந்தைகள்
தகுதிகள்
கைவிடப்பட்ட பெண் குழந்தைகளைப் பெறுவதற்காக வரவேற்பு மையங்கள், மாவட்ட சமூக நல வாரிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல இல்லங்களில் இந்த தொட்டில்கள் வைக்கப்படும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்/மையங்களில் வைக்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் தகுதியுள்ள பெற்றோர்களால் தத்தெடுக்கப்படும்.
தத்தெடுப்பிற்கு வழங்கப்படாத நிலையில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அவர்களது பராமரிப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு நல மையங்களுக்கு அளிக்கப்படும்.
அரசு சாரா அமைப்புகள்/குடிமக்கள் ஆகியோர் இந்த தொட்டிலில் குழந்தைகளை வைப்பதற்கு ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.
மாவட்ட சமூக நல அதிகாரிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பயனாளிகளுக்குத் தகவல்களை அளிக்கும் அதிகாரிகளாவர்.
இந்த தொட்டில் குழந்தை மையங்களை அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.47.45 இலட்சமாகும். ஒவ்வொரு மையமும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு துணை செவிலியர், ஒரு துணை உதவியாளர், இதர பணியாளர்கள் மற்றும் தேவையான பால் பொடி, மருந்துகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
முடிவுகள்
குழந்தை பாலின விகிதம் 2001 ஆம் ஆண்டில் 942/1000 என்பதிலிருந்து 2011 ஆம் ஆண்டில் 943/1000 ஆக உயர்ந்துள்ளது.