இந்தியா, வங்கதேசம் இடையே இன்று முதல் கப்பல் சேவை
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இன்று முதல் கப்பல் சேவை துவங்குகிறது. இந்த கப்பல் சேவை சுந்தர்பான்ஸ் வழியாக வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும்.
- புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய பெருமளவிலான மாநாட்டில் சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து பேசிய வெளிவிவகார துறையின் இணைச் செயலாளர் விக்ரம் துரைஸ்வாமி இரு நாடுகளுக்கும் இடையே உள்நாட்டு நீர்வழங்கல் பாதைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கப்பல் சேவை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளை தவிர, இந்திய - வங்கதேச நாடுகள் நீர்வழிகள் மூலம் மிக வலுவான மின் இணைப்புகளை கொண்டுள்ளன என துரைஸ்வாமி தெரிவித்தார்.
- உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை துவங்குவதால், இந்தியாவிலிருந்து பொருட்கள் வங்கதேசத்தில் நாராயங்கஞ்ச் மற்றும் டாக்கா வரை மலிவான சாத்தியமான கடல்மார்க்கமாக செல்ல முடியும்.
ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் தடை ஐரோப்பிய ஒன்றியம்
- ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் ஸ்ட்ரா, முள்கரண்டி, கத்தி மற்றும் காதுகுடையும் பருத்தி பட்ஸ் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் முடிவை எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
- இந்த தடை வரும் 2021ம் ஆண்டில் அமலுக்கு வரும். ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவால், மேற்கண்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மறுசுழற்சி நடவடிக்கையை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தற்போது, கடற்கரை மற்றும் கடலில் கலக்கும் குப்பைகளில் 85% பிளாஸ்டிக் குப்பைகளாக இருக்கின்றன. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதோடு, மிக மோசமான சூழலியல் சீர்கேடுகளும் நிகழ்கின்றன.
- இறந்துபோன பல திமிங்கலங்களின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கண்டெடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும், குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை செய்வதில்லை என்று சீனா எடுத்திருக்கும் முடிவும், ஐரோப்பிய யூனியனை இந்த நடவடிக்கையை நோக்கி தள்ளியுள்ளது.
- இந்த முடிவுக்கு ஆதரவாக 560 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பதிவாகின. இதன்படி, மொத்தம் 10 வகையான 'ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள்' தடைசெய்யப்படவுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 40,666 கோடி டாலரை தாண்டியது
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,666 கோடி டாலரை (ரூ.28.46 லட்சம் கோடி) தாண்டியுள்ளது.
- கடந்த மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 103 கோடி டாலர் (ரூ. 7,210 கோடி) உயர்ந்து 40,666.7 கோடி டாலராகியுள்ளது. அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதையடுத்து அந்நியச் செலாவணி கையிருப்பானது தொடர் ஏற்றத்தைக் கண்டு வருகிறது.
- இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 360 கோடி டாலர் உயர்ந்து 40, 564 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 103 கோடி டாலர் அதிகரித்து 37,880 கோடி டாலரை எட்டியது.இதன்காரணமாகவே, அந்நியச் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவு ஏற்றத்தை சந்தித்துள்ளது.
- சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் இருப்பு 7 லட்சம் டாலர் குறைந்து 146 கோடி டாலராகவும், அதேபோன்று நாட்டின் கையிருப்பு மதிப்பு 15 லட்சம் டாலர் சரிந்து 299 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
ஆறு பெண் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக அறிவித்த உச்சநீதிமன்றம்
- உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் 37 பேரை மூத்த வழக்கறிஞர்களாக பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேர் பெண் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.
- மாதவி கரோடியா திவான்
- அனிதா ஷெனாய்
- அபராஜிதா சிங்
- மேனகா குருசாமி
- ஐஸ்வர்யா பாடி
- பிரியா ஹிங்க்ரோணி.