- பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்துதல்.
- பெண் சிசுக் கொலையினை ஒழித்தல்.
- ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமையினை குறைத்தல்.
- சிறு குடும்ப கொள்கையை மேம்படுத்துதல்.
- ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பெண் குழந்தைகளின் தரத்தை உயர்த்துதல்.
வழங்கப்படும் உதவிகள்
திட்டம் – I : ஒரு பெண் குழந்தைக்கான திட்டம்
- ஒரே ஒரு பெண் குழந்தையை கொண்ட குடும்பத்திற்கு 20 வருட காலத்திற்கு தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் நிரந்தர வைப்பு நிதியாக அந்த பெண் குழந்தையின் பெயரில் மொத்த தொகையாக ரூ.22,200 வழங்கப்படும்.
- இத்தொகையானது, அப்பெண் குழந்தை 01-08-2011-க்கு பிறகு பிறந்திருந்தால் ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்.
திட்டம் – II : இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம்
- இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு 20 வருட காலத்திற்கு தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் உட்கட்டமைப்பு கழக மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் நிரந்தர வைப்பு நிதியாக அந்த ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் மொத்த தொகையாக ரூ.15,200 வழங்கப்படும்.
- இத்தொகையானது, அப்பெண் குழந்தைகள் 01-08-2011 அன்று (அ) அதற்குப் பிறகு பிறந்திருந்தால் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
- ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகள்.
வருமான வரம்பு
- திட்டம்-I–ன் கீழ் பயனைப் பெற ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- திட்டம்-II –ன் கீழ் பயனைப் பெற ஆண்டு வருமானம் ரூ.24,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதர தகுதிகள்
- பெற்றோர்களில் யாராவது ஒருவராயினும் 35 வயதிற்குள்ளாக கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
- தம்பதியினர் கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தை மட்டுமே பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக ஆண் குழந்தை பெற்றிருக்க கூடாது. எதிர்காலத்திலும் ஆண் குழந்தையை தத்தெடுக்க கூடாது.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சமயத்தில் குழந்தைகளின் பெற்றோர்/மூதாதையர்கள் கண்டிப்பாக 10 வருட காலத்திற்கு தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
- இத்திட்டம் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.