திட்டத்தின் நோக்கங்கள்
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் விதவை தாய்மார்களுக்கு அவர்களது மகள்களின் திருமணத்தை நடத்துவதற்கு தேவையான நிதி உதவியை வழங்குதல்.
வழங்கப்படும் உதவிகள்
- ரூ.25,000 காசோலை மூலமாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கு தேவையான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
- ரூ.50,000 காசோலை மூலமாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கு தேவையான 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
- மணமகளின் விதவை தாயாருக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் இறந்துவிட்ட நிலையில் மணமகளுக்கு வழங்கப்படும்.
வருமான வரம்பு
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
- திருமணத்தின்போது மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- உச்ச வயது வரம்பு இதில் இல்லை.