திட்டத்தின் நோக்கங்கள்
- விதவை மறுமணத்தினை ஊக்குவிப்பதும், விதவைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
வழங்கப்படும் உதவிகள்
- திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.25,000 (ரூ.15,000 காசோலை மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாகவும்) தொகையும் வழங்கப்படும்.
- திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.50,000 (ரூ.30,000 காசோலை மூலமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாகவும்) தொகையும் வழங்கப்படும்.
தகுதியுடைய பயனாளிகள்
- மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள்.
வருமான வரம்பு
- வருமான உச்ச வரம்பு கிடையாது.
வயது வரம்பு
- மணப்பெண்ணின் வயது குறைந்தபட்சம் 20 ஆகவும், மணமகனுக்கு அதிகபட்சமாக 40 வயதாகவும் இருக்க வேண்டும்.