- தற்போது கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு $50 என விலை குறைந்துள்ளதால் உலக பொருளாதார நிலை மாறலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சுமார் இரு மாதங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை $100 ஐ தாண்டும் என ஊகங்கள் எழுந்தன. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை அதில் பதியாக அதாவது ஒரு பாரல் $50 என ஆகி உள்ளது. இதனால் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு லாபம் என்றாலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இழப்பு ஏற்படும். இந்த நிலை உலகப் பொருளாதாரத்தை எவ்விதம் பாதிக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
- எண்ணெய் உற்பத்தியாளர்களில் முதன்மையான நாடுகளான ரஷ்யா மற்றும் சௌதி அரேபியாவுக்கு இடையே நல்ல வர்த்தக உறவு உள்ளதால் மற்றொரு பெரிய நாடான அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என இந்த நாடுகளை வற்புறுத்தி வருகிறார். இந்த வார இறுதியில் நடக்க உள்ள எண்ணெய் உற்பத்தி நாடுகள் மாநாட்டில் இது குறித்து எடுக்கப்படும் முடிவை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
- உலகின் வட பகுதியில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் எண்ணெய் விலை குறைவு இந்தப் பகுதி நாடுகளுக்கு பொருளாதார விழ்ச்சியில் இருந்து சற்று ஆறுதல் தரலாம். குறிப்பாக சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் இந்நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இந்த எண்ணெய் விலைக் குறைவு மிகவும் உபயோகமாக இருக்கும்.
- இந்தியா போன்ற பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகளில் எண்ணெய் விலை குறைவினால் வங்கிகள் அதிக வட்டி விதிப்பதை தடுக்கும். அதனால் பணவீக்கம் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்த எண்ணெய் விலைக் குறைவு பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவக்கூடும்.
- கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு $10 வீழ்ச்சி அடைந்தால் உற்பத்தி செலவு குறையும். அத்துடன் பொருட்களின் விலை 0.5% - 0.7% குறையும். இதனால் மக்களின் வாங்கும்திறன் அதிகரிக்கும். அதே நேரத்தில் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் இந்த வாங்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது.
- மொத்தத்தில் இந்த கச்சா எண்ணெய் விலைக் குறைவு எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு சற்றே பாதகமாக இருந்தாலும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுக்க்தும் என அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை குறைவும் உலக பொருளாதாரமும்
January 02, 2019
0
Tags