- இந்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,354 கோடி உட்பட மொத்தம் ரூ.32,612 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தை (IPDS) செயல்படுத்த 2014 நவம்பர் 20-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தற்போது செயல்பட்டு வரும் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விரைவு எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள்
- நகர்ப்புறங்களில் துணை மின்கடத்துதல் மற்றும் விநியோக வசதிகளை பலப்படுத்துதல்.
- நகர்ப்புறங்களில் நுகர்வோர் இணைப்புகளில் மட்டுமின்றி, விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்களிலும் மின்சாரத்தை அளவிடுதல்.
- மின் விநியோகத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விரைவு எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தில் (R-APDRP) செயல்படுத்தப்பட்டு வரும் விநியோக வசதிகளை பலப்படுத்துவது.
- மின் விநியோக நிறுவனங்கள், மாநில அரசுகளுடன் இணைந்து 12-வது மற்றும் 13-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் தடையற்ற, போதுமான மின்சாரம் வழங்கப்படும்.
- இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஒட்டுமொத்த, தொழில்நுட்ப, வர்த்தக செலவுகள் குறையும். கணக்கு மற்றும் கணக்குத் தணிக்கையில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மீட்டர் அடிப்படையில் பணம் வசூலிக்கும் சேவை, பண வசூல் செயல்திறன் மேம்படுத்தப்படும்.
- இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 2014-15: ரூ.645.26 கோடி (மறுசீரமைப்புத் திட்டம்: ரூ.595.25 கோடி + ஒருங்கிணைந்த திட்டம்: ரூ.50 கோடி) 2015-16: ரூ.6000 கோடி