- நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தைவிட முன்னதாகவே எட்டப்பட்டு விட்டதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கடந்த ஏப்ரல் அறிவித்தார்.
- கடந்த 4.5 ஆண்டுகளில் நாடெங்கிலும் 33 லட்சம் எல்.இ.டி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறிய மோடி, எல்.இ.டி மின் விளக்குகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
- தயாள் உபாத்யாயா நூற்றாண்டை முன்னிட்டு சவுபாக்யா யோஜனா திட்டம் ரூ.16,320 கோடி மதிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 1953 முதல் 1968 வரை பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக பதவி வகித்த பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி சவுபாக்யா யோஜனா திட்டத்துக்கு 2018க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்ட உத்தேசிக்கப்பட்டது.
- நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், 24 மணி நேரமும் மின் சேவை கிடைப்பதை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உறுதி செய்வதே சவுபாக்யா திட்டத்தின் முக்கிய இலக்கு.
- இந்த திட்டத்தின்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இணைப்புக் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக மின் இணைப்புக் கொடுப்பது.
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம்! : இலக்கை எட்டிய சவுபாக்யா திட்டம்
December 18, 2018
0