Type Here to Get Search Results !

நமாமி கங்கை திட்டம்

  • கங்கை நதி அதன் புனிதத்தினாலும், கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது. 
  • 2014ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவீத இந்திய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சி தான்.
  • பிரதமரின் இந்த கூற்றை நனவாக்கும் வகையில் இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்துள்ளது. 2019-20ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 100 சதவீதம் மத்திய அரசின் திட்டம் ஆகும்.



திட்ட செயல்பாடுகள்
  • ஆரம்பகட்ட பணிகள், இடைநிலை பணிகள், நீண்டகால பணிகள் என்று பிரிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது உடனடியாக பார்த்ததும் மாற்றத்தை ஏற்படுத்துதல், பின்னர் 5 ஆண்டு காலத்தில் முடிக்கும் பணிகளை நிறைவு செய்தல், தொடர்ந்து 10 ஆண்டுக்கு நீண்டகால பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • இதில் தொடக்க நிலை பணிகளில், முதல்கட்டமாக நதியின் மேற்பகுதி சுத்தப்படுத்தப்படும், அதாவது நீரின் மேற்பரப்பில் காணப்படும் மிதக்கும் கழிவுகள், ஊரகபகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுகள், மாசுகளை அகற்றும் பணிகள், மேற்கொள்ளப்படும். இதற்காக ஊரகப்பகுதிகளில் ஆற்றோர கிராம மக்களுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்படும், தொடர்ந்து கழிவுநீர் சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டு அவை சுத்திகரிக்கப்படும்.
  • அடுத்ததாக கங்கையில் எரிக்கப்படாத, அல்லது பாதி எரிக்கப்பட்ட பிணங்கள் வீசுவதை தடுக்க அதன் கரையோரங்களில் நவீன முறையிலான சுடுகாடுகள் அமைக்கப்படும். நதியுடனான இணைப்பு கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு அதன் மூலம் கழிவுகள் கலப்பது தடுக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel