- 2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.
- 4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.
- கிராம மக்களுக்கான வீடுகள் எனும் திட்டம் கிராம வளர்ச்சி அமைச்சகத்தால் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது.
- மத்திய அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட இத்திட்டத்தின் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
- கழிப்பறை மற்றும் புகையில்லா சுல்கா (chulha) ஆகியனவற்றைக் கட்டும் செலவும் இவ்வுதவித் தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின்படி வீட்டின் உரிமை முதலில் குடும்பத்தின் உறுப்பினருக்கே சேரும்.
கிராமிய குடியிருப்பு திட்டம் / இந்திரா ஆவாஸ் யோஜனா
December 07, 2018
0