- “டிஜிட்டல் இந்தியா”- இந்திய அரசின் தலையாய திட்டங்களில் ஒன்று. இதன் நோக்கம் இந்திய மக்களை டிஜிட்டல அதிகாரமிக்கவர்களாகவும், ஒரு அறிவார்ந்த பொருளாதாரமாகவும் மாறுபாடடையச் செய்வது.
- இந்திய திறமைகளையும், தகவல் தொழில்நுட்பத்தையும் எதிர்கால இந்தியாவாக உருமாற்றுவதில் இதன் தீவிர கவனம் உள்ளது.
இத்திட்டத்தின் மிக முக்கிய மூன்று நோக்கங்கள்
- ஓவ்வொரு குடிமகனுக்கும் உட்கட்டமைப்புவசதி பயன்பாடாவது.
- தேவைக்கேற்ற ஆளுமை மற்றும் சேவைகள்
- ஓவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமேம்பாடு
டிஜிட்டல் இந்தியா வாரத்தின் நோக்கங்கள்
- மிண்ணிம மையங்களான பொதுச்சேவைமையங்கள் அஞ்சலகங்கள், பள்ளிகள், கிராம சபைகள் போன்றவற்றில் பிரசாரம், பிரசுரங்கள் மற்றும் கல்வியூட்டம் மூலமாக மக்களை சென்றடைதல்
- எல்லா இணைய பயணர்களையும் டிஜிட்டல் ஊடக பிரசாரங்கள் மூலமாக ஒன்றிணைத்தல்.
- எல்லோருக்கும் இத்திட்டத்தின் நோக்கம் சேவைகள் மற்றும் பயன்கள் குறித்து தெரியப்படுத்துவது.
- மின்-சேவைகள் குறித்து பிரபலப்படுத்தவதும் அதன் சென்றடையும் திறனை மேம்படுத்துவதும்.
- இந்திய மக்களுக்கு செயல்பாட்டு- டிஜிட்டல் கல்வியறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் இணைய சுகாதாரம் குறித்து கல்வி புகட்டப்படல் வேண்டும். டிஜிட்டல் உட்கட்டமைப்பு சிறந்த பயன்பாடு பெறவும், வளரவும், டிஜிட்டல் இந்திய வாரத்தில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்
- குடிமக்களை டிஜிட்டல் இந்திய திட்டத்துடன் இணைய ஊக்கப்படுத்துவதும் மற்றும் உற்சாகப்படுத்துவதும் டிஜிட்டல் இந்திய வாரத்தின் நோக்கங்கள் ஆகும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம்
- டிஜிட்டல் இந்தியா வாரம் நமது மரியாதைக்குறிய இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் ஜுலை 1 2015 தொடங்கப்பட்டது. இதனுடன் பல புது சேவைகளும் தயாரிப்புகளும் (டிஜிட்டல் பெட்டகம் போன்றவை) தொடங்கப்பட்டன.