- பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோரைத் தொழில் தொடங்க ஊக்குவித்து ஆதவரளிப்பதுதான் எழுக இந்தியா திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறையினால் இத்திட்டம் ஒருங்கிணைப்படுகிறது.
- ஒவ்வொரு வங்கிக் கிளையில் இருந்தும் குறைந்த பட்சம் ஒரு ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தவர் பெண்ணுக்கு பத்த லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை கடன் வழங்கி அவர்கள் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்க எழுக இந்தியா திட்டம் உதவுகிறது.
- புதிய தொழில் என்பது உற்பத்தி சார்ந்தோ, சேவைகள் துறையாகவோ, வணிமாகவே இருக்கலாம். தனிநபர் அல்லது கூட்டு - நிறுவனத் தொழில் முனைவோராக இருந்தால், அத்தகையை நிறுவனத்தில் குறைந்தது 51% உரிமை ஆதிதிராவிடர் – பழங்குடியினர் பெண்களிடம் இருக்க வேண்டும்.
தகுதிகள்
- 18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள்
- புதிய தொழில் தொடங்கப்படவேண்டும். புதிய தொழில் என்பது கடன் பெறுவோர் புதிதாகத் தொடங்கும் உற்பத்தி / சேவை / வணிகம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
- கடன்பெறுவோர், ஏற்கனவே எந்த வங்கியிலாவது அல்லது நிதிநிறுவனத்திலாவது கடன்பெற்று திரும்பச் செலுத்தத் தவறியவராக இருக்க கூடாது.
கடன் விபரங்கள்
- நீண்ட காலக்கடன் மற்றும் செயல்முறை மூலதனக்கடன் என்று மொத்தமாக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரை பெறலாம்.
- புதிய தொழிலுக்கான திட்டமதிப்பீட்டில் 75 சதவீதம் கடன் பெறலாம். ஆனால் கடன்பெறுபவரின் சொந்தப் பங்களிப்பு மற்றும் பிற திட்டங்கள் ஆதரவு திட்ட மதிப்பில் 25 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்போது, கடனுகக்கான உச்சவரம்பு 75 சதவீதம் என்பது தளர்த்தப்படும்.
- வங்கிகள் இந்தக் குறிப்பிட்டபிரிவில் விதிக்கும் குறைந்த பட்ச வட்டியே இந்தக்கடனுக்கும் விதிக்கப்படும். அதாவது, அடிப்படை கடன் விகிதம் + 3% + நீண்ட காலக்கடனுக்கு உரிய பிரிமியம் எனற கணக்கில் வட்டி நிர்ணயிக்கப்படும்.
- முதல்நிலை உத்தரவாதத்தோடு, கடன் பெற்று வாங்கப்படும் பொருள்கள் / சாதனங்கள் / சொத்துக்கள் மீதும் பிணைய உத்தரவாதம் தரவேண்டும் அல்லது வங்கிகள் விரும்பினால். எழுக இந்தியா திட்டக்கடன்களுக்கான உத்தரவாத நிதியத்தில் இருந்தும் உத்தரவாதம் பெற்றுக் கொள்ளலாம்.
- இத்திட்டக் கடன்களை ஏழு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கடனைச் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். சலுகை காலம் அதிகபட்சம் 18 மாதங்கள்