- திறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மானியமாக அளிக்கப்படும் ரூ.1499.27 கோடி உட்பட இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1798.71 கோடி.
செயல்படுத்தபடும் இடங்கள்
- நிலத்தடி நீர் அளவிற்கு மிஞ்சி பயன்படுத்தப்பட்ட, நீர்மட்டம் இக்கட்டான அல்லது நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ள ஆந்திராபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகம், இராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 1180 ஓன்றியங்கள்/தாலுகாக்கள் அல்லது மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் நோக்கம்
- தற்போதுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்துதல், நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்துதல், பற்றாக்குறை காலங்களிலும் நீர் இருப்பை தக்கவைத்தல் மற்றும் ஒட்டு மொத்த வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
விபரங்கள்
- இத்திட்டத்தின் மூலம் 4.45 மில்லியன் கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் 2.72 மில்லியன் கிணறுகள் சிறுகுறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை; மற்றவை பிற விவசாயிகளுக்குச் சொந்தமானவை.
- ஒரு கிணற்றில் நீர்சேமிப்பு அமைப்பு அமைக்க சராசரியாக ரூ.4000/- செலவாகிறது. தங்கள் சொந்த நிலத்தில் கிணறு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 50% மானியமும் அளிக்கப்படவுள்ளது.