- ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நுட்பங்களான, இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் சரியான அளவு வேதியியல் உரங்களையும், துணை மற்றும் நுண்ணூட்டச்சத்துகளை உபயோகிப்பதன் மூலம், மண்ணின் வளத்தையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க ஊக்குவித்தல்.
- மண்ணை பரிசோதிக்கும் வசதிகளை அதிகரித்து, விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அடிப்படையில், மண்வளத்தினை அதிகரிக்க ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கச்செய்தல்.
- பசுந்தாள் உரங்களின் மூலம் மண்ணின் வளத்தினை அதிகரித்தல்.
- அமில மற்றும் காரத்தன்மையுடைய மண்ணினை மாற்றியமைக்க தேவையான நுட்பங்களை பின்பற்றச் செய்வதன் மூலம், அந்நிலத்தின் வளத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்தல்.
- நுண்ணூட்டச்சத்துகளின் உபயோகத்தினை ஊக்குவித்து அதன் மூலம் உரங்களின் செயல்பாட்டுத்திறனை அதிகரித்தல்.
- விரிவாக்கத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் விவசாயிகளின் நிலங்களில், சீரான உர பயன்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட களப்பயிற்சி அளித்தல்
- விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு உரங்களின் தரக்கட்டுப்பாட்டினை ஆய்வு செய்ய களப்பயிற்சி அளித்து, உரக்கட்டுப்பாட்டு ஆணையினை அமல்படுத்துதல்.
- மண் பரிசோதனைக்கூடங்கள் மற்றும் உரங்களை ஆய்வு செய்யும் பரிசோதனைக்கூடங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் நிதியுதவி வழங்குதல்.
இத்திட்டத்தின் அங்கங்களாவன
1. மண்பரிசோதனைக்கூடங்களை மேம்படுத்துதல்
- 11ம் ஐந்தாண்டுத்திட்டத்தின் கீழ் நுண்ணூட்டச்சத்துகளை ஆய்வு செய்ய 500 மண் பரிசோதனைக்கூடங்களையும், 250 நடமாடும் மண் பரிசோதனைக்கூடங்களையும் அமைத்தல்.
- மாநில அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 315 மண் பரிசோதனைக்கூடங்களை நுண்ணூட்டச்சத்து பரிசோதனைக்காக மேம்படுத்துதல்.
- மண் பரிசோதனைக்கூட அலுவலர்களையும், விரிவாக்க அலுவலர்களையும், விவசாயிகளையும் செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சி பட்டறைகளின் மூலம் அவர்களின் அறிவை மேம்படுத்துதல்.
- முறையான உர உபயோகத்திற்கான தகவல் வங்கியினை குறிப்பிட்ட பகுதிகளில் ஆரம்பித்தல்.
- முதன்மை கள செயல்முறை விளக்கங்களின் மூலம் மண் பரிசோதனைக்கூடங்கள், கிராமங்களை (10 கிராமங்கள் ஒரு மண் பரிசோதனைக்கூடத்திற்கு என்ற விகிதத்தில்) தத்தெடுத்துக்கொள்ளுதல்.
- மாவட்ட அளவிலான மிண்ணனு மண் வரைபடத்தினை தயாரித்தல் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் மூலம் அல்லது மாநில வேளாண் பல்கழைக்ககழகங்களின் மூலம் மண் வளத்தினை கண்காணித்தல்
2. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையினை ஊக்குவித்தல்
- இயற்கை உர உபயோகிப்பினை ஊக்குவித்தல்.
- அமிலத்தன்மையுடைய மண் இருக்கும் பகுதிகளில் மண்திருத்த பொருட்கள் பயன்பாட்டினை ஊக்குவித்தல்.
- நுண்ணூட்டச்சத்துகளின் பயன்பாட்டினை ஊக்குவித்து அவற்றினை விநியோகம் செய்தல்.
3. உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை மேம்படுத்துதல்
- மாநில அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 63 உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை மேம்படுத்துதல்.
- மாநில அரசுகளின் மூலம் 20 புதிய உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை உருவாக்குதல்.
- தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 50 உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்குதல்.
இத்திட்டத்திற்கான நிதியுதவி
- இத்திட்டம் 11வது ஐந்தாண்டுத்திட்டத்தில் ரூ,429.85 கோடி செலவில் அமல்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது