Type Here to Get Search Results !

ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்

  • எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதையும் அதன் தரத்தை உயர்த்துவதையும் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட்டம் (RSMA) நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 கி. மீட்டருக்குள் உயர்நிலைக் கல்வியை (பத்தாம் வகுப்பு வரை) கொண்டு செல்ல உள்ளது. மத்திய அரசின் இந்த மிக சமீபத்திய திட்டம் அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி (USE) என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது 
  • 11 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் ராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் (RMSA) திட்டம் ரூ. 20,120 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. 
கண்ணோட்டம்
  • 14 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை எளியவழியில் குறைந்த செலவில் அளிப்பதை உயர்நிலைக் கல்வி நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்பதை நோக்கமாகக் கொண்டு பின்வருபவை எட்டப்படவேண்டும் :
  • எந்தவகை நிலப்பரப்பானாலும் குறிப்பிட்ட தூரத்திற்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி உருவாக்கப்பட வேண்டும். அதாவது 5 கி.மீக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளியும் 7-10 கி.மீக்குள் மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்தவேண்டும்.
  • 2017 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உயர்நிலைக்கல்வி என்ற நிலை எட்டப்படவேண்டும் (வருகைப்பதிவு 100%)
  • 2020 ஆம் ஆண்டிற்குள் பள்ளியில் சேர்ந்து அனைவரையும் இடையில் விலகிவிடாமல் தொடர்ந்து தக்கவைத்தல்.
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்,கல்வியில் பின்தங்கியவர்கள், பெண்கள்,ஊனமுற்ற குழந்தைகள்,கிராமப்புறத்தில் வசிப்போர் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி & சிறுபான்மையினர் உள்ளிட்ட பின்தங்கிய மக்களும் உயர்கல்வி அளிப்பதில் சிறப்பு கவனம செலுத்துதல்.



மத்திய அரசு உதவிபெறும் திட்டங்கள்
  • ஐசிடி (தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) உயர்நிலை & மேல்நிலை வகுப்புகளில் கணிணிக் கல்வி மற்றும் கணிப்பொறி வழிக் கல்வி அளிக்க மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
  • உடலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குகான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (IEDC) தன்னார்வ அமைப்புகள் & மாநில அரசுகளுக்கு இக்குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த நிதி அளிக்கிறது.
  • உயர்நிலை & மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு உணவு மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல். கிராமப்புறங்களில் விடுதிகளை நடத்த தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி உதவி.
  • பள்ளிகளின் தரம் உயர்த்துதல் யோகா பயிற்சி,அறிவியல் கல்வி, சுற்றுச்சூழல் & மக்கள்தொகைக் கல்வி மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியட் முதலியவற்றை மேம்படுத்தல்.
  • கேந்த்ரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.



நிதிபங்களிப்புத் திட்டம் மற்றும் வங்கிக் கணக்கு பெறுதல்
  • 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு திட்டங்களின் அனைத்துப் பிரிவுகளையும் செயல்படுத்த மொத்த திட்டமதிப்பீட்டில் 75% தொகையை மத்திய அரசு அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு 90% நிதி அளிக்கப்படுகிறது.(மத்திய மாநில பங்களிப்பு உள்ள அனைத்து திட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்)
  • 12 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதிப்பகிர்வு திட்டம் 50:50 என்று மாறும். வடகிழக்கு மாநிலங்களுக்கு இது 11 மற்றும் 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திலும் 90:10 என்ற விகிதத்திலேயே இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel