- கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தை இந்திய அரசு 2004 -ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் தொடங்கியது.
- கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டவை.
- 2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ள / கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா கல்வி நிலையங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட நிதித் தொடர்பான விதிமுறைகள் பொருந்தும்.
- 2007 மார்ச் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள தற்போதைய 2180 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா கல்வி நிலையங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொடர் மானியம் மட்டுமே பொருந்தும். இது, 2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
குறிக்கோள்
- சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகள் தங்கிப் படிக்க ஏதுவான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இணைந்த ஆரம்பப் பள்ளிக்கூடங்களை அமைத்து அக்குழந்தைகளுக்குத் தரமான கல்வி எளிதில் கிடைக்குமாறு செய்வதுதான் கே.ஜி.பி.வி.-யின் நோக்கமாகும்.