Type Here to Get Search Results !

அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது பிரிவில் "6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அவர்களுடைய அடிப்படை உரிமை" என்று கூறப்பட்டிருக்கிறது. 
  • இதை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட கால வரையரைக்குள் இந்திய அரசு தனது முதன்மையான திட்டமாகிய "சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.' என்கிற (எல்லோருக்கும் கல்வி') திட்டத்தின் மூலம் ஆரம்பக்கல்வியை அனைவருக்கும் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 
  • அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 11 லட்சம் கிராமங்களைச் சார்ந்த 192 மில்லியன் குழந்தைகளின் கல்வித்தேவைகள் பூர்த்தியாகும்.



நிதி நெறிமுறைகள்
  • சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவி ஒன்பதாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 85:15 என்ற விகிதத்திலும், பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் 75:25 என்ற விகிதத்திலும், அதன்பின் வரும் காலங்களில் 50:50 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.
  • 'மஹிலா சமக்யா', தேசிய பால பவன் மற்றும் என்.ஸி.டி.ஈ. எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை தவிர மத்திய கல்வித்துறையின் அனைத்துத் திட்டங்களும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குப் பின் ஒன்றிணைக்கப்படும். 
  •  ஆரம்பக் கல்விக்கென சத்துணவு வழங்கும் தேசியத் திட்டம் (மதிய உணவுத் திட்டம்) மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும்; இத்திட்டத்திற்கான உணவு தானியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசும், சமைக்கப்படும் உணவிற்கான செலவை மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel