- தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் ஆதரவற்ற பெண்கள் திருமணம் செய்து கொள்ள உதவும் மங்கள மாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்ட விபரம்
- சமூக நல இயக்குநரகத்தினர் கிழ் உள்ள குழந்தைகள் இல்லங்களிலும், சேவை இல்லங்களிலும் ஆதரவற்ற பெண்களுக்கும், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கும் புகலிடம் அளிக்கப்பட்டு வருகிறது.
- இப்பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து திருமண வயதை அடையும் பொழுது திருமணம் செய்வித்து அவர்களது குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையும் வகையில் ஆதரவு அளித்து உதவுவது அவசியமாகும்.
- இந்த ஆதரவற்ற ஏழைப் பெண்கள், தகுந்த துணையைத் தேர்ந்தெடுக்க உதவிடும் வகையில் அவர்களுக்கு ஆதரவான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஆதரவற்ற பெண்களுக்கு பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவிபுரிவதோடு மட்டுமின்றி அப்பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொள்வதையும் தடுக்கிறது.
- தாய், தந்தை இருவரும் இல்லாத ஆதரவற்ற 18 வயது நிரம்பிய பெண்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.