- மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமான ராஷ்ட்ரீய உச்சதர் சிக்க்ஷா அபியான் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- மாநிலங்களின் வகைக்கு ஏற்ப பொதுப்பிரிவு மாநிலங்களுக்கு 60 சதவீதமும், சிறப்புப்பிரிவு மாநிலங்களுக்கு 90 சதவீதமும் மத்திய அரசின் நிதி உயர் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்படுகிறது.
- மாநிலங்களின் உயர் கல்விக் கவுன்சில்களின் மூலமாக மத்திய அரசின் அமைச்சகங்கள் வழங்கும் நிதிவுதவி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உயர்க்கல்வித் துறையில் சிறப்பான சாதனைகளை எட்டுவது, பலருக்கும் கல்வி வாய்ப்புகள் அளிப்பது, சமத்துவ நெறியை வளர்த்தெடுப்பது போன்ற மாநிலங்களின் வளர்ச்சி உத்திகளைப் பிரதிபலிக்கின்ற அவற்றின் உயர்கல்விக் கவுன்சில்களின் திட்டங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நிதிவுதவி அளிக்கப்படும்.
ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியானின் நோக்கம்
- கல்லூரிகளுக்கு இணைவுதருதல், பாடத்திட்டம் வரையறுத்தல், தேர்வு முறைகள் ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொணர்தல்.
- எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலும், தரமான பேராசிரியர் போதிய அளவில் இருப்பதை உறுதிசெய்தல்
- கல்லூரி – பல்கலைக்கழகப் பேராசியர்கள் புதுமை முயற்சிகளிலும் உயர் ஆய்வுகளிலும் ஈடுபடுவதற்கான உகந்த சூழலை உருவாக்குதல்
- உயர்க்கல்வித் துறையில் நிலவும் வட்டார சமச்சீரற்ற சேர்க்கை களைதல். அதாவது இதுவரை உயர்க்கல்வி நிலையங்கள் இல்லாத பகுதிகளிலும், உயர்க்கல்வி நிலையங்கள் போதிய அளவில் இல்லாத பகுதிகளிலும் புதிய கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துதல்
- ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், மாற்றித்திறனாளர்கள் உள்ளிட்டோருக்கு போதிய உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் சமத்துவ நெறிமேம்பட உதவுதல்.