TNPSC SHOUTERS - NOVEMBER 2018
CURRENT AFFAIRS
|
||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st
NOVEMBER 2018
|
|
2.
|
2nd
NOVEMBER 2018
|
|
3.
|
3rd
NOVEMBER 2018
|
|
4.
|
4th
NOVEMBER 2018
|
|
5.
|
5th
NOVEMBER 2018
|
|
6.
|
6th
NOVEMBER 2018
|
|
7.
|
7th
NOVEMBER 2018
|
|
8.
|
8th
NOVEMBER 2018
|
|
9.
|
9th
NOVEMBER 2018
|
|
10.
|
10th
NOVEMBER 2018
|
|
11.
|
11th
NOVEMBER 2018
|
|
12.
|
12th
NOVEMBER 2018
|
|
13.
|
13th
NOVEMBER 2018
|
|
14.
|
14th
NOVEMBER 2018
|
|
15.
|
15th
NOVEMBER 2018
|
|
16.
|
16th
NOVEMBER 2018
|
|
17.
|
17th
NOVEMBER 2018
|
|
18.
|
18th
NOVEMBER 2018
|
|
19.
|
19th
NOVEMBER 2018
|
|
20.
|
20th
NOVEMBER 2018
|
|
21.
|
21st
NOVEMBER 2018
|
|
22.
|
22nd
NOVEMBER 2018
|
|
23.
|
23rd
NOVEMBER 2018
|
|
24.
|
24th
NOVEMBER 2018
|
|
25.
|
25th
NOVEMBER 2018
|
|
26.
|
26th
NOVEMBER 2018
|
|
27.
|
27th
NOVEMBER 2018
|
|
28.
|
28th
NOVEMBER 2018
|
|
29.
|
29th
NOVEMBER 2018
|
|
30.
|
30th
NOVEMBER 2018
|
அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - 67.45 லட்சம் பேர் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்
- அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரத்தை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாதம் ரூ.1,00,710 கோடி வரி வசூலாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதி வரை 67.45 லட்சம் ஜிஎஸ்டிஆர் படிவம் 3 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாக கடும் சரிவை சந்தித்தது. செப்டம்பர் மாதத்தில் ரூ.94,000 கோடியாக உயர்ந்தது. அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாக அதிகரித்துள்ளது.
- அக்டோபர் மாத வரி வசூல் அதற்கு முந்தைய மாதத்தை விட 6.64 சதவீதம் அதிகமாகி உள்ளது. மொத்த வரிவசூலில் சில மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக கேரளா 44 சதவிகித வரிதாரர்களை கொண்டுள்ளது. ஜார்க்கண்ட் 20 சதவிகிதம், ராஜஸ்தான் 14 சதவிகிதம், உத்தரகாண்ட் 13 சதவிகிதம், மகாராஷ்டிரா11 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
தேனியில் நியூட்ரினோ அமைக்க இடைக்காலத்தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
- தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
- தமிழகத்தின் தேனி மாவட்டம், அம்பரப்பர் மலையில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.
- தீர்ப்பில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்குத் தடை இல்லை. தேனி நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. வன உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்த திட்டத்தை தொடர முடியும்.
தமிழகத்தில் இருந்து முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வாழைக்காய் ஏற்றுமதி: கோவை வேளாண் பல்கலைக்கழகம் சாதனை
- இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வாழைக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த சாதனையை கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வாழை உற்பத்தி யாளர்கள் கூட்டமைப்பு இணைந்து செயல்படுத்தி உள்ளது.
- கோவை பகுதியில் இலுருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு முதன் முறையாக நமது வாழைக் காய்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை உருவாக்கிடும் முகாந்திரமாக இத்தாலியை சேர்ந்த 'போர்ட் ஆப் திரிஸ்ட்ஸ்' நிதியுதவியுடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணைந்து கம்பிவட கடத்தி என்ற அமைப்பி னை உருவாக்கியுள்ளது.
- இந்த அமைப்பின் மூலமாக அறுவடை செய்த வாழைத்தாரினை தோட்டத்திலிருந்து சிப்பம் கட்டி பதப்படுத்தும் கூடம் வரை எந்தவித சேதாரம் மற்றும் இழப்புமின்றி கொண்டு செல்ல முடியும்.
- வாழை அறுவடையை தொடர்ந்து, ஏற்றுமதிக்கு உகந்த தரத்தில் பேக்கிங் செய்யப்பட்டு முறையாக கண்டெய்னரில் நிரப்பப்பட்டு இந்தியாவிலிருந்து முதன் முறையாக ஐரோப்பாவிற்கு கொச்சின் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக, நேற்று (நவம்பர் 1-ம் தேதி) ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முதல் மைக்ரோபிராசசர்: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை
- இந்தியாவில் முதல்முறையாக மைக்ரோபிராசசர்களை உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.'சக்தி' என பெயரிடப்பட்ட இந்த மைக்ரோ பிராசசர்கள், இஸ்ரோவின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசிப்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதன் மூலம் மைக்ரோ பிராசசர்கள் தேவைக்கு வெளிநாட்டை சார்ந்திருப்பது குறைவதுடன், தொலை தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறையில் சைபர் தாக்குதல்களை குறைக்க முடியும்.
ராகுல் திராவிட்: ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த 5வது இந்திய வீரர்
- ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்தியவீரர் ராகுல் திராவிட் இணைந்துள்ளார். இவர் ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த இந்தியாவின் 5வது இந்திய வீரர் ஆவார்.
- இதுவரை 343 போட்டிகளில் விளையாடி அவர், 10820 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். போட்டியில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 153. 12 சதங்களும், 82 சதங்களும் எடுத்துள்ள ராகுல் திராவிட் 317 போட்டிகளில் மட்டையை பிடித்து விளாசி உள்ளார். 946 பவுண்டரிகளும, 46 சிக்சர்களும் விளாசி உள்ள ராகுல் திராவிட் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிஐன் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளார்.
- ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் காவஸ்கர், கபில்தேவ், அணில் கும்ப்ளே, பிஷன் சிங் பேடி ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில் 5வது வீரராக ராகுல் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.