Type Here to Get Search Results !

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)

  • கல்வி 2014 –ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட 71 வது என்எஸ்எஸ்ஓ ஆய்வின்படி, கிராமப்புற குடும்பங்களில் 6% பேர் மட்டுமே கணினி பயன்படுத்துவோராக உள்ளனர். 
  • இதலிருந்து 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் (@ 16.85 கோடி குடும்பங்களில் 94%) கணினிகள் இல்லாமலும் மற்றும் டிஜிட்டல் படிப்பறிவற்று இருப்பதும் தெளிவாக தெரிகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எங்கிலுமுள்ள கிராமப்புற பகுதிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு உறுப்பினர் என்ற விதத்தில் சுமார் 40% கிராமப்புற குடும்பங்களை சென்றடைந்து ஆறு கோடி பேர்களை டிஜிட்டல் கல்வியறிவு உள்ளவர்களாக ஆக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இதற்கு முன்பாக, தி டிஜிட்டல் ஷக்ஷார்டா அபியான் (DISHA) அல்லது தேசிய மின்ணுக் கருவிகள் அறிவாற்றல் திட்டம் (NDLM) 52.5 லட்சம் மக்களுக்கு தகவல் தொழில் நுட்பம் பற்றிய பயிற்சியை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 
  • நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலுள்ள அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகப் பணியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி தருவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சாராதவர்களும் பயிற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்று ஜனநாயக நடைமுறைகளிலும் வளர்ச்சியிலும் திறம்படவும், விரைவாகவும் பங்கேற்க வழி பிறக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.



எதிர்பார்க்கப்படும் விளைவு
  • டிஜிட்டல் கல்வி விளக்கம்: “டிஜிட்டல் கல்வி என்பது வாழ்க்கை சூழ்நிலைகளில் பயனுள்ள வேலைகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ளும் மற்றும் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் திறமையாகும்”.
  • கிராமப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது டிஜிட்டல் அணுகல் சாதனங்களை (டேப்லட்டுகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை) ஆப்பரேட் செய்வது இமெயில்கைளை அனுப்புவது மற்றும் பெறுவது, இன்டர்நெட்டை புரவுஸ் பண்ணுவது, அரசு சேவைகளை அணுகுவது, தகவல்களை தேடுவது, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வது போன்றவை குறித்து பயிற்சியளித்து இதன் மூலம் அவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான பயன்பாட்டகங்கள் குறிப்பாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்றவற்றை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்து தேசத்தை கட்டி எழுப்பும் செயலில் அவர்களை தீவிரமாக பங்கேற்க வைக்க இத்திட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC) / பழங்குடியினர் (ST), வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் (BPL), பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர்கள் போன்ற சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்கள் உட்பட அனைத்து கிராமப்புற மக்களை இலக்காக கொண்டு டிஜிட்டல் இடைவெளியை நீக்க திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel