பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பணிக்கொடை வழங்கல் (திருத்த) மசோதா 2017- 2018 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தனியார் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் / CCS (ஓய்வூதிய) விதிகளின் கீழ் வராத அரசுக்கு கட்டுப்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பணிக்கொடை வரம்பை அதிகபட்ச அளவுக்கு உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.
பணிக்கொடை திருத்த மசோதா
- பணிக்கொடை சட்டம் 1972’-ன்படி தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு தற்போது ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முறைசார் துறைகளில் 5 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் பணியாற்றி விட்டு விலகினாலோ அல்லது பணி ஓய்வின் போதோ ரூ.10 லட்சம் வரை வரியில்லா பணிக்கொடை பெற முடியும்.
- இந்த உச்சவரம்பை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.20 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. எனவே இதற்காக மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் தாக்கலான அந்த மசோதா குரல் ஓட்டு மூலம் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா இனி மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
- அங்கும் இந்த மசோதா நிறைவேறி சட்டமானால், முறைசார் தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு வரியில்லாமல் ரூ.20 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
- இதைப்போல பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பையும், பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குகிறது.