ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு
- 2012-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினித் தகவல் தரவில் சேமிக்கப்பட்டுள்ளது, எனவே சோதனையின் போது பாஸ்போர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.
- எனவே குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- அதேவேலையில் தற்போது நீல நிறத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்-ன் நிறத்தினை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் முகவரி இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட்டு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு தற்போது வழங்கப்படுவது போல் தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேவை கட்டண தள்ளுபடியால் ஆன்லைன் ரயில் டிக்கெட்டில் 26 சதவீதம் வருவாய் இழப்பு
- ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் தள்ளுபடி செய்ததால் வருவாய் 26 சதவீதம் குறைந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சேவை கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய சேவை கட்டணமாக சாதாரண டிக்கெட்களுக்கு 20, ஏசி டிக்கெட்களுக்கு 40 வசூல் செய்யப்படும்.
- கடந்த 2016-17 நிதியாண்டில் இந்த நிறுவன இணையதளம் மூலம் 20.9 கோடி டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டில் 19.9 கோடியாக இருந்தது. அதாவது, 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களின் மதிப்பு 2 சதவீதம் மட்டுமே அதிகரித்து 24,485.21 கோடியாக உள்ளது. இது பிற தனியார் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுவனங்களை விட அதிகம்.
- ஐஆர்சிடிசி மொத்த வருவாய் 2016-17 நிதியாண்டில் 1,596.31 ஆக உயர்ந்துள்ளது. சேவை கட்டணம் தள்ளுபடியால் இணையதள டிக்கெட் வருவாய் 26 சதவீதம் சரிந்து 466.05 கோடியாக உள்ளது. ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு ரயில் நீர், சுற்றுலா, இணையதள டிக்கெட் மூலம் கணிசமான வருவாய் வருகிறது. சுற்றுலா வருவாய் 41 சதவீதம் அதிகரித்து 527.35 கோடியாக உள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 34 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் இழப்பை ஈடுகட்ட சுற்றுலா போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என ஐஆர்சிடிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போலி சாதிச் சான்றிதழ்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு
- ஒடிசா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோகேஷ்குமார் சிங்கின் பதவியை ரத்து செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டம்ன்ற தேர்தலில் ஜோகேஷ்குமார் சிங் போலி சாதிச் சான்றிதழ் சமர்பித்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
- இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஜோகேஷ்குமார் சிங் கண்டாயத் பூயன் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் வராது.
- இந்நிலையில், போலியான சாதிச் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டு நிரூபணமானதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோகேஷ்குமார் பதவியை ஒடிசா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாத பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு
- மத்திய அரசுப் பணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்துப் பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
- முக்கியமான அமைச்சகங்கள் மற்றும் அவையுடன் தொடர்புடைய துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் நிதி ஆலோசகர்கள் மற்றும் இணைச் செயலாளர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
- ஜனவரி 16-ம் தேதியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாகவும் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கிய ரயில் தொடர்பு 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை ரயில்பாதை மூலம் இணைக்கும் ஒப்பந்தம் ஒன்று கடந்த 2006-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. பாகிஸ்தானின் சிந்த் மாநிலம் மற்றும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் வழியாகச் செல்லும் இந்தப் பாதை, இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த ஒரு சிறந்த பாலமாக இருக்கும் என்பதால், மிக முக்கியமான ரயில் தொடர்பாக கருதப்படுகிறது. இதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், தற்போது அதே ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த ரயில் பாதையானது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையில் இருக்கும் முனாபாவ் (Munabhao) என்ற இடத்தில் இருந்து பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் இருக்கும் சிந்த் மாநிலத்தில் உள்ள கோக்ராப்பர் (Khokhrapar) வரை செல்கிறது.
- தற்போது இந்த ரயில் பாதைக்கான ஒப்பந்தம்தான் ஜனவரி 31, 2021-ம் ஆண்டு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான், இந்தியாவுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை (ceasefire agreement) மீறிச் செயல்பட்ட இந்த நேரத்தில் இந்த ரயில்வே தொடர்பு பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கெலோ விளையாட்டுகளை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- புதுடெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஜன.,31) முதல் "கெலோ இந்தியா ஸ்கூல் விளையாட்டுகளை" துவங்கிவைக்கின்றார்.
- இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஆரம்ப புள்ளியில் இருந்தே காணவும், அவர்களை ஊக்குவித்து விளையாட்டு துறையினை ஊக்குவிப்பதன் முயற்சியாகவும் கெலோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- இந்தியாவில் அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த கெலோ ஆதாரமாய் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.