
7th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளுக்காக சுமார் ரூ.1,10,000 கோடி மதிப்பிலான பல்வேறு தளவாடங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான கொள்கை அளவிலான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த மொத்தக் கொள்முதலில் சுமார் 98 சதவீத தளவாடங்கள் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- இந்திய ராணுவத்திற்காக ரசாயன, உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுதப் பாதிப்புகளைக் கண்டறியும் உளவு வாகனங்கள், கடினமான நிலப்பரப்புகளில் இயங்கும் அதிநவீன வாகனங்கள், கண்ணிவெடி பதிக்கும் அமைப்புகள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இழுவை பீரங்கிகள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- உளவு வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்டவை. நவீன வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடினமான சூழ்நிலைகளில் ராணுவப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படும்.
- இந்திய கடற்படைக்காக ஆருத்ரா ரேடார்கள், கடல்சார் எரிவாயு டர்பைன்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- ஆருத்ரா ரேடார்கள் தற்போதைய கண்காணிப்பு ரேடார்களுக்கு மாற்றாக செயல்படும். உள்நாட்டு எரிவாயு டர்பைன் உற்பத்தி, போர் கப்பல் துறையில் அயல்நாட்டு சார்புநிலையைக் கணிசமாகக் குறைக்கும்.
- இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களின் போர் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- தரைவழி பல்நோக்கு ஜாமர்கள், பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பான அணுகல் அட்டை (Access Card) அமைப்பைப் பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமர்கள் எதிரிகளின் ரேடார்களை முடக்கும் வல்லமை கொண்டவை.
- பாதுகாப்பான அணுகல் அட்டை அமைப்பு வழக்கமான காகித அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அதிநவீன ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் பலப்படுத்தும்.
- சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- இறுதிப்போட்டியில் சீனாவின் ஹீ ஜி டிங்-ரென் சியாங் யூ ஜோடியை 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன் மூலம் சீனா மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
- இந்த வெற்றி நடப்பு சீசனில் சாட்விக்-சிராக் ஜோடிக்கு கிடைத்த 2-வது பட்டமாகும். இதற்கு முன்பு சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 தொடரில் இருவரும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
- மேலும், தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 தொடரில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தனர். இதனால் இந்த சீசனில் இந்திய ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28-வது கூட்டம் கோவாவின் பனாஜியில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் & டையூ நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இக்கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, மேற்குப் பிராந்தியம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, தொழில்துறை, நிதிசார் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
- 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு இப்பிராந்தியத்தின் பங்களிப்பு அளப்பரியது என்று பாராட்டினார்.

