
6th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டம் ‘கோபர்தன்’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு (கோபர்தன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் தூய்மையான எரிசக்திப் பயணத்தில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வேளாண்மைக் கழிவுகள், சாணம், நகர்ப்புறக் கழிவுகள் உள்ளிட்டவற்றைத் தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருவாயாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கும்.
- 2026-27 நிதியாண்டு முதல் 2035-36 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், உயிரிஎரிவாயு உற்பத்தியை நாட்டின் எதிர்கால எரிசக்திக் கட்டமைப்பின் முக்கியத் தூணாக மாற்றும்.
- மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம், உள்நாட்டு உற்பத்தியைப் பத்து மடங்கு வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
- அசாமில் தேசிய நெடுஞ்சாலை 15-ல் 135.871 கிலோ மீட்டர் தொலைவிலான நான்கு வழித் தடங்களைக் கொண்ட குவகாத்தி-தேஜ்பூர் வழித்தடத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் ரூ 8,970.20 கோடி மொத்த மூலதன செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையுடன் இணைந்து தேஜ்பூர் புறவழிச் சாலையில் அவசரகாலத் தரையிறங்கும் வசதி (4.9 கிமீ) அமைக்கப்பட உள்ளது.
- இது பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள என்எச்27 (கிழக்கு-மேற்கு வழித்தடம்) சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்.
- இத்திட்டத்தில் 58.7 கிமீ தொலைவிற்கு ஐந்து பெரிய புறவழிச்சாலைகள் அமைப்பதும் அடங்கும். இதன் காரணமாக, பைஹாடா சரியாலி, சிபஜார், கருபேடியா, தேக்கியாஜூலி, தேஜ்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
- அத்துடன், 15 பெரிய பாலங்கள், 30 சிறிய பாலங்கள், 19 மேம்பாலங்கள், 1 யானை கடந்து செல்லும் பாதை (தேஜ்பூர் புறவழிச்சாலையில்) ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

