//
Type Here to Get Search Results !

1st JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

1st JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்
  • இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலவி வரும் வழக்குச் சுமைகளைக் குறைக்கவும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும் ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு இன்று (ஜூன் 1, திங்கள்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் முறைப்படி வெளியிட்டுள்ளார்.
  • அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாகப் பொறுப்பேற்க உள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
  • நீதிபதி ஷீல் நாகு: பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
  • நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர்: மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
  • நீதிபதி சஞ்சீவ் சச்தேவா: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
  • நீதிபதி அருண் பல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
  • மூத்த வழக்கறிஞர் வி. மோகனா: உச்ச நீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞரான வெங்கட சுப்ரமணி மோகனா.
  • முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 34 நீதிபதிகள் மட்டுமே பணியாற்ற அனுமதி இருந்த சூழலில், கடந்த மே 5-ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை இக்கூட்டமைப்பின் மொத்த எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியிருந்தது. 
  • தற்போது இந்த 5 புதிய நீதிபதிகளின் சேர்க்கை மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்கிறது.
வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண்
  • தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஒரு எளிய பின்னணியில் பிறந்த வி. மோகனா, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற வரலாற்றை பெற்றிருக்கிறார்.
  • 1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் மாணவியான இவர், கோவை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, 1980-களின் இறுதியில் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் தனது பணியைத் தொடங்கினார்.
  • பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் (Permanent Commission) வழங்க வேண்டும் என்ற வழக்கில் வாதாடி அவர் முன்வைத்த வாதங்கள் தான். 
  • இது பலரது கவனத்தை பெற்றதுடன் இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்துக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அவரது சட்டத் திறமையை அங்கீகரித்து, 2015-ல் உச்சநீதிமன்றம் இவரை 'மூத்த வழக்கறிஞர்' ஆக அங்கீகரித்தது. 
  • வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவார்கள். ஆனால், வழக்கறிஞர் பணியிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாவது மிகவும் அரிதான ஒன்று. 
  • நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்குப் பிறகு, இந்த வழியில் நீதிபதியாகும் இரண்டாவது பெண் மோகனா ஆவார். அதேசமயம், தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண்ணும் இவர்தான்.
ஐபிஎல் 2026 - ஆர்சிபி சாம்பியன் 
  • ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.
  • டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த 20 ஓவர்கள் முடி​வில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 155 ரன்​கள் எடுத்​தது.
  • இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
  • விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில், 11 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
  • 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி அணி பெற்றது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் 2026 - இந்திய ஜோடி சாத்விக், சிராக் தங்கம் வென்று வரலாற்று சாதனை
  • சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்ஃபியான் - முகமது ஃபிக்ரி ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
  • சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்தோனேசியா ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
  • இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel