
16th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் இலாகா விபரங்கள்
- தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றார்கள். இவர்களுக்கான துறைகள் கிட்டத்தட்ட ஒருவாரம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளர்கள் நலத்துறை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்.
- என் ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை.
- ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை.
- கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை
- கே.ஏ. செங்கோட்டையன் - நிதித்துறை
- பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.
- ஆர் நிர்மல் குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை
- ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை.
- டி.கே.பிரபு - கனிமவளத்துறை
- எஸ். கீர்த்தனா - தொழில்துறை
- நெதர்லாந்து நாட்டிற்கு ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்' (லைடன் பட்டயங்கள்) பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- காலனித்துவ காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருட்களைத் திரும்பப் பெறும் இந்தியாவின் கலாச்சார மீட்பு நடவடிக்கைகளில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
- நெதர்லாந்தில் 'லைடன் பட்டயங்கள்' என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று ஆவணங்கள், கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி செய்த மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.
- இந்தியாவின் எல்லைகளுக்கு வெளியே பாதுகாக்கப்பட்ட மிக முக்கியமான தமிழ் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன.

